பூமிப்பந்தின் போர்வையை பாதுகாப்போம்
ஆதவனின்
கதிர்களில் இருந்து வெளிப்படும் அல்ட்ராவயலட் கதிர்வீச்சு , யுவி - பி
கதிர்களில் இருந்து மனித இனத்தை பாதுகாக்கும் போர்வையாக ஓசோன் மண்டலம்
செயல்பட்டு வருகிறது. இந்த போர்வை மண்டலம் பூமியில் இருந்து பத்து முதல்
ஐம்பது கிலோமீட்டர் உயரத்தில் பூமியைச் சூழ்ந்துள்ளது. வேதி இயற்பியல்படி
ஆக்சிஜன் எனப்படும் உயிர்வாயு இரண்டு அணுக்களைக் கொண்டது. வளிமண்டலத்தில்
மூன்று அணுக்களைக் கொண்ட உயிர்வாயு இயற்கையாக உருவாகிறது. இதைத்தான் ஓசோன்
என்று அழைக்கிறார்கள்.
இது ஒரு போர்வையாக பூமியை மூடி நிற்கிறது. இந்த மண்டலம் மெலிந்து வருவதாக 1970ம் ஆண்டில் அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர். பூமியில் மனிதர்கள் நிறுவியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன், புளோரின், குளோரின், ஃப்ரியோன், ஹாலோன் ஆகிய நச்சு வாயுக்களால் ஓஸோன் மண்டலம் மெலிவடைவதாக அவர்கள் காரணம் கூறினர்.தற்போது ஓசோன் மண்டலத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள ஓசோன் மண்டலத்தில் உள்ள துவாரம் ஆஸ்திரேலியா கண்டத்தை நுழைத்து மறுபுறம் உருவிவிடும் அளவுக்கு பெரிதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
1985ம் ஆண்டில் உலகில் உள்ள நாடுகள் வியன்னாவில் ஓசோன் துவாரம் பற்றி விவாதிக்க கூடின. ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க உருவாக்கப்படும் கூட்டுறவு நடவடிக்கைகளின் நடைமுறையை தீர்மானிக்கும் முயற்சியில் இந்த மாநாடு ஈடுபட்டது. இந்த மாநாட்டில் ஒரு சாசனம் கையெழுத்திடப்பட்டது. ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வியன்னா சாசனம் என்று இதற்கு பெயரிடப்பட்டது.சர்வதேச அளவில் வெற்றி பெற்ற சாசனங்களில் இதுவும் ஒன்றாகும். 193 ஐநா உறுப்பு நாடுகளும், வாட்டிகன் உள்ளிட்ட மூன்று சிறுநாடுகளும் இதில் கையொப்பமிட்டுள்ளன. அனைத்து நாடுகளும் கையொப்பமிட்ட வகையில் இது ஒரு வெற்றிச்சாசனம் என்ற போதும் நடைமுறையில் இது முழுவெற்றி பெறவில்லை. ஓசோன் மண்டல பாதுகாப்பு நாள் ஆண்டு தோறும் செப்டம்பர் 16 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மாண்ட்ரீல் நகரில் ஓசோன் மண்டல பாதுகாப்புக்கான மாண்ட்ரீல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதற்கான பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை இந்த ஒப்பந்தம் தொடக்கி வைத்தது.2030ம் ஆண்டுக்குள் ஹைட்ரஜன், கார்பன், புளோரின், வாயுக்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் நிறுத்துவது என்று காலவரையறை இந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. தீர்மானத்தின்படி செப்டம்பர் 16 உலக ஓசோன் மண்டல பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஒரு முழக்கத்துடன் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முழக்கமாக ‘ஒரு ஆரோக்கியமான வளிமண்டலம் - நாம் விரும்பும் எதிர்காலம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று உலகெங்கும் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டது.ஆதவனின் கதிர்வீச்சு ஓசோன் மண்டலத்தால் தடுக்கப்படுகிறது. அந்த மண்டலம் அழிக்கப்பட்டால், கதிரவனில் இருந்து வெளிக்கிளம்பும் அல்ட்ராவயலட் கதிர்களும், யுவி-பி கதிர்களும் நேரடியாக மனித இனத்தை தாக்கும்.
இவை மனிதர்களின் உடலில் வெப்பக்கொப்பளங்களை உருவாக்கும். இந்தக் கொப்பளங்கள் பல்வேறு தோல் புற்றுநோய்களையும், கண்புரை நோயையும் உருவாக்கும். மனித உடம்பின் அடிப்படைக்கட்டுமான பொருளான டிஎன்ஏ (deoxyribic nucleic acid) வை சேதப்படுத்தும். மனிதனின் டிஎன்ஏ சேதமடைவதால் பல அபாயவிளைவுகள் ஏற்படும். சிறுவர்களும், விடலைப்பிள்ளைகளும் தோல் புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் . முதிர்ச்சி அடைந்த மக்களும் பின்னால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் அவசியம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சுகவாசிகளான நாம், நமது ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தும் பல பொருட்கள் ஓசோன் மண்டலத்துக்கு எதிரிகளாக உள்ளன. நாம் பயன்படுத்தும் பொருட்களால் உருவாகும் தூசுப்படலம், பிளாஸ்டிக் பொருட்கள், குளிரூட்டிகள், மற்றும் குளிர்சாதனப்பெட்டி ஆகியவற்றில் உருவாகும் குளோரின், புளோரின், கார்பன் வாயுக்கள் ஓசோன் மண்டலத்தில் நுழைகின்றன.
இவை ஓசோன் வாயுவுடன் வேதியியல் வினை புரிவதால் ஓசோன் மண்டலத்தில் முதலில் துளையும், பின்னர் துவாரங்களும் உருவாகின்றன. ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க அறிவியலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவாளர்களின் முயற்சிகள் மட்டும் போதாது. தன்னைப்பற்றியும், தான் வாழும் சமுதாயத்தைப் பற்றியும், தனக்கு வாழ்வளித்து வரும் இயற்கையின் மேம்பாடு பற்றியும் கவலைப்படும் அனைவரின் ஒட்டுமொத்த முயற்சியும் தேவைப்படுகிறது. ஓசோன் மண்டலம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம்முடைய நெடுங்கால நலன்களுக்கு அவசியமானதாகும்.
நமக்கு மட்டுமல்லாது, நமது வருங்கால தலைமுறையினருக்கும் இது நன்மையளிக்கும். நமது சந்ததியினருக்கும், அனைவரையும் வாழவைக்கும் பாதுகாப்பான பூமியில் வாழும் உரிமை உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பான பூமியை நமது அன்பளிப்பாக விட்டுச் செல்வோம்.
இது ஒரு போர்வையாக பூமியை மூடி நிற்கிறது. இந்த மண்டலம் மெலிந்து வருவதாக 1970ம் ஆண்டில் அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர். பூமியில் மனிதர்கள் நிறுவியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன், புளோரின், குளோரின், ஃப்ரியோன், ஹாலோன் ஆகிய நச்சு வாயுக்களால் ஓஸோன் மண்டலம் மெலிவடைவதாக அவர்கள் காரணம் கூறினர்.தற்போது ஓசோன் மண்டலத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள ஓசோன் மண்டலத்தில் உள்ள துவாரம் ஆஸ்திரேலியா கண்டத்தை நுழைத்து மறுபுறம் உருவிவிடும் அளவுக்கு பெரிதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
1985ம் ஆண்டில் உலகில் உள்ள நாடுகள் வியன்னாவில் ஓசோன் துவாரம் பற்றி விவாதிக்க கூடின. ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க உருவாக்கப்படும் கூட்டுறவு நடவடிக்கைகளின் நடைமுறையை தீர்மானிக்கும் முயற்சியில் இந்த மாநாடு ஈடுபட்டது. இந்த மாநாட்டில் ஒரு சாசனம் கையெழுத்திடப்பட்டது. ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வியன்னா சாசனம் என்று இதற்கு பெயரிடப்பட்டது.சர்வதேச அளவில் வெற்றி பெற்ற சாசனங்களில் இதுவும் ஒன்றாகும். 193 ஐநா உறுப்பு நாடுகளும், வாட்டிகன் உள்ளிட்ட மூன்று சிறுநாடுகளும் இதில் கையொப்பமிட்டுள்ளன. அனைத்து நாடுகளும் கையொப்பமிட்ட வகையில் இது ஒரு வெற்றிச்சாசனம் என்ற போதும் நடைமுறையில் இது முழுவெற்றி பெறவில்லை. ஓசோன் மண்டல பாதுகாப்பு நாள் ஆண்டு தோறும் செப்டம்பர் 16 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மாண்ட்ரீல் நகரில் ஓசோன் மண்டல பாதுகாப்புக்கான மாண்ட்ரீல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதற்கான பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை இந்த ஒப்பந்தம் தொடக்கி வைத்தது.2030ம் ஆண்டுக்குள் ஹைட்ரஜன், கார்பன், புளோரின், வாயுக்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் நிறுத்துவது என்று காலவரையறை இந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. தீர்மானத்தின்படி செப்டம்பர் 16 உலக ஓசோன் மண்டல பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஒரு முழக்கத்துடன் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முழக்கமாக ‘ஒரு ஆரோக்கியமான வளிமண்டலம் - நாம் விரும்பும் எதிர்காலம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று உலகெங்கும் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டது.ஆதவனின் கதிர்வீச்சு ஓசோன் மண்டலத்தால் தடுக்கப்படுகிறது. அந்த மண்டலம் அழிக்கப்பட்டால், கதிரவனில் இருந்து வெளிக்கிளம்பும் அல்ட்ராவயலட் கதிர்களும், யுவி-பி கதிர்களும் நேரடியாக மனித இனத்தை தாக்கும்.
இவை மனிதர்களின் உடலில் வெப்பக்கொப்பளங்களை உருவாக்கும். இந்தக் கொப்பளங்கள் பல்வேறு தோல் புற்றுநோய்களையும், கண்புரை நோயையும் உருவாக்கும். மனித உடம்பின் அடிப்படைக்கட்டுமான பொருளான டிஎன்ஏ (deoxyribic nucleic acid) வை சேதப்படுத்தும். மனிதனின் டிஎன்ஏ சேதமடைவதால் பல அபாயவிளைவுகள் ஏற்படும். சிறுவர்களும், விடலைப்பிள்ளைகளும் தோல் புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் . முதிர்ச்சி அடைந்த மக்களும் பின்னால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் அவசியம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சுகவாசிகளான நாம், நமது ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தும் பல பொருட்கள் ஓசோன் மண்டலத்துக்கு எதிரிகளாக உள்ளன. நாம் பயன்படுத்தும் பொருட்களால் உருவாகும் தூசுப்படலம், பிளாஸ்டிக் பொருட்கள், குளிரூட்டிகள், மற்றும் குளிர்சாதனப்பெட்டி ஆகியவற்றில் உருவாகும் குளோரின், புளோரின், கார்பன் வாயுக்கள் ஓசோன் மண்டலத்தில் நுழைகின்றன.
இவை ஓசோன் வாயுவுடன் வேதியியல் வினை புரிவதால் ஓசோன் மண்டலத்தில் முதலில் துளையும், பின்னர் துவாரங்களும் உருவாகின்றன. ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க அறிவியலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவாளர்களின் முயற்சிகள் மட்டும் போதாது. தன்னைப்பற்றியும், தான் வாழும் சமுதாயத்தைப் பற்றியும், தனக்கு வாழ்வளித்து வரும் இயற்கையின் மேம்பாடு பற்றியும் கவலைப்படும் அனைவரின் ஒட்டுமொத்த முயற்சியும் தேவைப்படுகிறது. ஓசோன் மண்டலம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம்முடைய நெடுங்கால நலன்களுக்கு அவசியமானதாகும்.
நமக்கு மட்டுமல்லாது, நமது வருங்கால தலைமுறையினருக்கும் இது நன்மையளிக்கும். நமது சந்ததியினருக்கும், அனைவரையும் வாழவைக்கும் பாதுகாப்பான பூமியில் வாழும் உரிமை உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பான பூமியை நமது அன்பளிப்பாக விட்டுச் செல்வோம்.
No comments:
Post a Comment