ரூபாய் வீழ்ச்சி : குற்றவாளி யார்?
- என்.பி. ரமேஷ் கண்ணன்
இந்திய
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட்
2011ல், ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.45 என்று இருந்த ரூபாய் மதிப்பு,
ஆகஸ்ட் 2013ல் ரூ.68 எனக் கடுமையாகச் சரிந்துவிட் டது. இதனால் அனைத்து
பகுதி மக்களும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
அந்நிய முதலீட் டாளர்களும், வெளிநாட்டுக் கடன் பெறும் நிறு வனங்களும், இறக்குமதியாளர்களும், ஆடம் பரப் பண்ட இறக்குமதி இன்றி வாழவே முடி யாது என்று திணறுபவர்களும் இது குறித்து அதிகம் கவலைப்படுகிறார்கள். பணவீக்கம் காரணமாக வீழ்ச்சியடைந்திருக்கும் ரூபாயின் உள்நாட்டு மதிப்பு, சாமானிய மக்களின் வாங் கும் சக்தியினையும், வாழ்க்கைத் தரத்தினை யும் ஏற்கனவே பெருமளவு பாதித்திருக்கிறது. இத்தகைய நிலையினைக் கூட, ரூபாயின் வெளிநாட்டு (செலாவணி) மதிப்பின் வீழ்ச்சி மறக்கடித்துவிட்டது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணம் குறித்து பல்வேறு வியாக்கியானங்களைச் செய்து வரும் ஆட்சியாளர்களும், முதலாளித் துவ பொருளாதார வல்லுனர்களும், முழு உண் மையினையும் கூற மறுக்கிறார்கள்.
உடனடி அபாயம் : மார்ச் 2013ல் முதிர்வடைந்த இந்தியாவின் குறுகிய கால அந்நிய கடன் தொகை 172 பில்லியன் டாலர்கள். இன்று இதைத் திருப்பிச் செலுத்துவதானால், இந்தியா தனது 298 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணிக் கை யிருப்பில் 60 சதவீதத்தினை இழக்க வேண்டி வரும். மார்ச் 2014 க்குள் இந்த தொகைகள் திருப்பி செலுத்தப்படவேண்டும்.
மார்ச் 2008ல் வெறும் 54.7 பில்லியன்களாக இருந்த அந்நிய கடன் 6 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந் துள்ளது. இந்தியாவின் மொத்த குறுகிய கால அந்நிய கடனில் (390பில்லியன்), 44 சதம் இந்திய பெருநிறுவனங்களின் கடன்களே யாகும். இன்று இந்திய பெருநிறுவனங்கள் சில கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ள சில நிறுவனங்கள், தங்களின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்கத் துவங்கி விட்டதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள் ளன.
காற்றாலை உற்பத்தியில் உலகின் ஐந் தாவது இடத்தினை வகிக்கும் இந்திய பன் னாட்டு நிறுவனமான சுஸ்லான் (ளரணடடிn) தன்னுடைய இந்தியச் சொத்துக்களில் 70 முதல் 75 சதவீதத்தினை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறு வனம், அபுதாபியின் எட்டிஹாட் ஏர்வேஸ் நிறு வனத்திடம் தனது பங்குகளை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக் கிறது.இதில் மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடனில் 70 சதவீதக் கடன்கள் இப்பெரும் நிறு வனங்களுக்கு வழங்கப்பட்டவையேயாகும்.
எனவே, இந்நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள் ளானால், அது அடுத்த கட்டத்தில், இந்திய வங்கித் துறையின் நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் குறிப்பிட்டுள்ளபடி, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினை சமாளிக்க 90 பில்லியன் டாலர்கள் உடனடியாக தேவைப் படுகிறது.
தவறான விளக்கங்கள் : அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர், பெர்னர்ட் பெர்னன்கே “அமெரிக்கா தன்னு டைய தாராள பணப்புழக்க நடைமுறையினை (ணுரயவேவையவiஎந நயளiபே) முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது” என்று 22.05.2013 அன்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தான் இந் திய ருபாயின் வீழ்ச்சிக்கு காரணம் என்று இந் திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.இது முற்றிலும் தவ றான வாதமாகும். ஏனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவோ ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி துவங்கிவிட்டது. அது மட்டு மன்றி, மே 22க்கு பின்னரும் கூட, அமெரிக்கா தனது நீண்டகால கடனுக்கான வட்டி விகி தங்களை கட்டுக்குள் வைப்பதற்காக, சந்தை யிலிருந்து அரசின் கருவூலப் பத்திரங்களை வாங்கி டாலரின் புழக்கத்தை அதிகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறது. இருந்த போதும், பெர்னன்கேயின் அறிக்கை சில ஊக எதிர் பார்ப்புக்களை உசுப்பிவிட்டிருக்கும் நிலை யில் அமெரிக்காவின் நீண்டகாலக் கடனுக் கான வட்டி விகிதங்கள் உயரத் தொடங்கியுள் ளன. இதனால் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த டாலர்கள் அமெரிக்கா நோக்கி வரத் துவங்கியுள்ளன.
இதன் விளை வாக தான், இந்தியா மட்டுமன்றி, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நாணயமும் டாலருக்கு எதிராக மதிப்பிழந்து வருகின்றன.
உலகளாவிய நெருக்கடி! : 2008 முதல் நீடித்து வரும் உலக நெருக் கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக,அதே கொள்கைகளை அமல்படுத்துவது தான் பண வீக்கமும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் உயர்ந்து வருவதன் காரணம் ஆகும்.
நீடித்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், இந் திய அரசு அமலாக்கி வரும் நவீன- தாராள வாதக் கொள்கைகளுமே ரூபாய் மதிப்பு வீழ்ச் சிக்கான உண்மையான காரணங்கள் ஆகும்.அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சி பெறுவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.
எப் போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப் போதெல்லாம் அமெரிக்காவிற்கு போர் தேவைப்படும். இன்று சிரியா மீது அமெரிக்கா தொடுக்க நினைக்கிற போர் அத்தகையதே யாகும். இது தவிர, ஐரோப்பிய பொருளாதாரம் இடியாப்பச் சிக்கலாக மாறி வருகிறது. சீனா வின் வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. அத னால் சீனாவின் முக்கிய ஏற்றுமதி நாடு களான பிரேசில் மற்றும் லத்தீன், அமெரிக்க நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படைந் துள்ளது.
பொருளாதார மந்தம் என்பது உலகம் முழுவதும் விரிவடைந்துகொண்டே வருகிறது. வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து விட்ட போதிலும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஓரளவு வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து வருகின்றன. இது எப்படி சாத்தியம்? மேலை நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியினால் அந்நாடுகளுக் கான ஏற்றுமதி குறைந்து விட்டது. ஆனால், ஆடம்பரப் பொருட்கள், வெளிநாட்டுக் கார்கள், தங்கம் என்று இறக்குமதி உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுதான் வளரும் நாடுகளின் வளர்ச்சியாக வெளிப்படுகிறது.
ஏற்றுமதியை விட இறக்குமதிகள் உயர்ந்த காரணத்தால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
மூலதனத்தின் பயணத் திட்டம் : இன்றைக்கு மூலதனத்தின் தாயகமும் மையமும் அமெரிக்கா என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. பிற நாடுகள் மூல தனத்தின் அதன் வெளிவட்டத்தில் உள்ளவை. இதில் மையத்திற்கும் வெளிவட்டத்திற்கும் பெருமளவில் வேறுபாடுகள் உண்டு.
வெளிவட்டத்தில் லாபம் அதிகம் கிடைக் கும் என்றால் மூலதனம் அங்கே பாய்ந்து ஓடும். ஆனால், அங்கு லாபம் குறைந்தாலோ, அல்லது அந்த நாடுகளில் நெருக்கடி தோன்றினாலோ அது மையத்திற்குத் திரும்பி விடும். மையத்தில் லாபம் குறைவாக இருந்தா லும் கூட அது மையத்திற்குத்தான் திரும்பும். ஏனெனில் அப்போது அது மூலதனத்தின் பாதுகாப்பு குறித்த பிரச்சனையாக மாறி விடுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தி யாவிற்குள் மூலதனம் வந்ததும் அப்படித்தான். இன்று வெளியேறிக் கொண்டிருப்பதும் அப்ப டித்தான்.
ஒரு நாட்டிற்குள் டாலர், அளவிற்கு அதிகமாக நுழையும் போது, அந்நாட்டின் கரன்சி மதிப்பு உயர்ந்து அது அந்நாட்டின் ஏற்றுமதிச் சந்தையில் சில பிரச்சனைகளை உருவாக்கும். அதே போன்று அளவிற்கதிக மாக டாலர் நாட்டை விட்டு வெளியேறும் போது அந்நாட்டு நாணயத்தின் மதிப்பை மட்டுமல்லாது, உற்பத்தியினையும் வீழ்ச்சி யுறச் செய்யும். இந்திய நாடு இத்தகைய இரண்டு பிரச்சனைகளையும் தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறது.
இவர்கள் குற்றம் குறைந்ததல்ல! : உலகப்பொருளாதார மந்தமும் நிதி மூலதனத்தின் போக்கும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கான சர்வதேசக் காரணிகள் எனி னும், இதில் இந்திய அரசின் குற்றம் எவ் வகையிலும் குறைந்ததல்ல. பொருளாதார மேதையான பிரதமருக்கும், உலகமயக்கொள் கையின் ஊதுகுழலான நிதியமைச்சருக்கும் அவரது படைப் பரிவாரங்களுக்கும் இதில் கணிசமான பங்கு உண்டு.
இன்று நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறித்து வாய் கிழியப் பேசுபவர்கள், 2010 - 2011ல் பற்றாக்குறை உயரத் துவங்கியவுடன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்கம், சொகுசுக் கார்கள் என ஆடம்பரப் பண்ட இறக்குமதி எதற்கும் தடையில்லை. இப்போதும் கூட இறக்குமதி வரி உயர்வினைத் தவிர வேறு நடவடிக்கைகள் எதுவுமில்லை. உள்நாட்டில் முதலீட்டிற்கான பணம் இருந்த போதும் இந்திய நிறுவனங்கள் தங்களின் உள்நாட்டு தேவைகளுக்காக அந்நிய கடன் களாக கோடிக்கணக்கான டாலர்களை திரட்ட அனுமதித்தது இவர்கள் தானே? நிதிப்பற்றாக் குறை அளவிற்கும் மேலாக வரிச்சலுகை அளித்த பணம் இந்தியப் பெருமுதலாளி களின் லாபத்திற்கும், உயர் செல்வந்தர்களின் இறக்குமதி வெறிக்கும் தானே உதவியது? எண்ணெய் விலையின் ஒரு பகுதியை ரூபாயாகத் தரலாம் என்ற ஈரானின் சலுகை காரணமாக, இந்தியாவிற்கு இன்று 8.5 பில்லியன் டாலர் வரை, அந்நியச் செலாவணி அனுகூலம் கிடைத்துள்ளது.
அன்று அதை உதறித் தள்ளியது இதே மன்மோகன் அரசு தானே? நடப்புக் கணக்குப் பற்றாக்குறை உயர்வில் சாமானிய மக்களின் பங்கு எதுவுமில்லை. ஆனால் அது உருவாக்கியிருக்கும் நெருக் கடிச் சுமையினை சுமப்பதில் அவர்கள் பங்கு மிக மிக அதிகம். ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் முதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் சலுகை அளிக்கும் போது சரியாத பங்குச் சந் தை, சாமானிய மக்களின் உணவுப் பாது காப்பிற்காக ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கும் வகையில் (இதுவே போதுமானதல்ல என்பது வேறு விஷயம்) சட்டம் இயற்றினால் சரியு மாம்.
உடனே, இது பொருத்தமான நேரமல்ல என முதலாளித்துவ ஊதுகுழல்கள் அனைத் தும் ஒரே குரலில் ஊதுகின்றன.
சரியான தீர்வு! : மூலதனப் போக்குவரத்து மீது கட்டுப் பாடுகள், தேவையற்ற இறக்குமதிகளுக்குத் தடை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை யினை குறைக்க முடியும். ஆனால், அதுவும் கூட மக்களின் வாங்கும் சக்தியினைத் தீர் மானிக்கின்ற ரூபாயின் உள்நாட்டு மதிப்பு வீழ்ச்சிக்குத் தீர்வாகாது.
உலகமயக் கொள்கை களுக்கு விடை கொடுப்பது ஒன்றுதான் இறுதி யான தீர்வாகும். அது வரை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல நெருக்கடிகள் மீண்டும் மீண்டும் வரவே செய்யும். எனினும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, அதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியினை அதிகரிக்கும் வகையில் பொது முதலீடுகள் மூலம் அரசு தலையிட வேண்டும். இந்தக் கோரிக்கை யினை முன் வைத்துப் போராட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.
- என்.பி. ரமேஷ் கண்ணன்
அந்நிய முதலீட் டாளர்களும், வெளிநாட்டுக் கடன் பெறும் நிறு வனங்களும், இறக்குமதியாளர்களும், ஆடம் பரப் பண்ட இறக்குமதி இன்றி வாழவே முடி யாது என்று திணறுபவர்களும் இது குறித்து அதிகம் கவலைப்படுகிறார்கள். பணவீக்கம் காரணமாக வீழ்ச்சியடைந்திருக்கும் ரூபாயின் உள்நாட்டு மதிப்பு, சாமானிய மக்களின் வாங் கும் சக்தியினையும், வாழ்க்கைத் தரத்தினை யும் ஏற்கனவே பெருமளவு பாதித்திருக்கிறது. இத்தகைய நிலையினைக் கூட, ரூபாயின் வெளிநாட்டு (செலாவணி) மதிப்பின் வீழ்ச்சி மறக்கடித்துவிட்டது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணம் குறித்து பல்வேறு வியாக்கியானங்களைச் செய்து வரும் ஆட்சியாளர்களும், முதலாளித் துவ பொருளாதார வல்லுனர்களும், முழு உண் மையினையும் கூற மறுக்கிறார்கள்.
உடனடி அபாயம் : மார்ச் 2013ல் முதிர்வடைந்த இந்தியாவின் குறுகிய கால அந்நிய கடன் தொகை 172 பில்லியன் டாலர்கள். இன்று இதைத் திருப்பிச் செலுத்துவதானால், இந்தியா தனது 298 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணிக் கை யிருப்பில் 60 சதவீதத்தினை இழக்க வேண்டி வரும். மார்ச் 2014 க்குள் இந்த தொகைகள் திருப்பி செலுத்தப்படவேண்டும்.
மார்ச் 2008ல் வெறும் 54.7 பில்லியன்களாக இருந்த அந்நிய கடன் 6 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந் துள்ளது. இந்தியாவின் மொத்த குறுகிய கால அந்நிய கடனில் (390பில்லியன்), 44 சதம் இந்திய பெருநிறுவனங்களின் கடன்களே யாகும். இன்று இந்திய பெருநிறுவனங்கள் சில கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ள சில நிறுவனங்கள், தங்களின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்கத் துவங்கி விட்டதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள் ளன.
காற்றாலை உற்பத்தியில் உலகின் ஐந் தாவது இடத்தினை வகிக்கும் இந்திய பன் னாட்டு நிறுவனமான சுஸ்லான் (ளரணடடிn) தன்னுடைய இந்தியச் சொத்துக்களில் 70 முதல் 75 சதவீதத்தினை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறு வனம், அபுதாபியின் எட்டிஹாட் ஏர்வேஸ் நிறு வனத்திடம் தனது பங்குகளை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக் கிறது.இதில் மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடனில் 70 சதவீதக் கடன்கள் இப்பெரும் நிறு வனங்களுக்கு வழங்கப்பட்டவையேயாகும்.
எனவே, இந்நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள் ளானால், அது அடுத்த கட்டத்தில், இந்திய வங்கித் துறையின் நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் குறிப்பிட்டுள்ளபடி, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினை சமாளிக்க 90 பில்லியன் டாலர்கள் உடனடியாக தேவைப் படுகிறது.
தவறான விளக்கங்கள் : அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர், பெர்னர்ட் பெர்னன்கே “அமெரிக்கா தன்னு டைய தாராள பணப்புழக்க நடைமுறையினை (ணுரயவேவையவiஎந நயளiபே) முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது” என்று 22.05.2013 அன்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தான் இந் திய ருபாயின் வீழ்ச்சிக்கு காரணம் என்று இந் திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.இது முற்றிலும் தவ றான வாதமாகும். ஏனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவோ ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி துவங்கிவிட்டது. அது மட்டு மன்றி, மே 22க்கு பின்னரும் கூட, அமெரிக்கா தனது நீண்டகால கடனுக்கான வட்டி விகி தங்களை கட்டுக்குள் வைப்பதற்காக, சந்தை யிலிருந்து அரசின் கருவூலப் பத்திரங்களை வாங்கி டாலரின் புழக்கத்தை அதிகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறது. இருந்த போதும், பெர்னன்கேயின் அறிக்கை சில ஊக எதிர் பார்ப்புக்களை உசுப்பிவிட்டிருக்கும் நிலை யில் அமெரிக்காவின் நீண்டகாலக் கடனுக் கான வட்டி விகிதங்கள் உயரத் தொடங்கியுள் ளன. இதனால் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த டாலர்கள் அமெரிக்கா நோக்கி வரத் துவங்கியுள்ளன.
இதன் விளை வாக தான், இந்தியா மட்டுமன்றி, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நாணயமும் டாலருக்கு எதிராக மதிப்பிழந்து வருகின்றன.
உலகளாவிய நெருக்கடி! : 2008 முதல் நீடித்து வரும் உலக நெருக் கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக,அதே கொள்கைகளை அமல்படுத்துவது தான் பண வீக்கமும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் உயர்ந்து வருவதன் காரணம் ஆகும்.
நீடித்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், இந் திய அரசு அமலாக்கி வரும் நவீன- தாராள வாதக் கொள்கைகளுமே ரூபாய் மதிப்பு வீழ்ச் சிக்கான உண்மையான காரணங்கள் ஆகும்.அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சி பெறுவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.
எப் போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப் போதெல்லாம் அமெரிக்காவிற்கு போர் தேவைப்படும். இன்று சிரியா மீது அமெரிக்கா தொடுக்க நினைக்கிற போர் அத்தகையதே யாகும். இது தவிர, ஐரோப்பிய பொருளாதாரம் இடியாப்பச் சிக்கலாக மாறி வருகிறது. சீனா வின் வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. அத னால் சீனாவின் முக்கிய ஏற்றுமதி நாடு களான பிரேசில் மற்றும் லத்தீன், அமெரிக்க நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படைந் துள்ளது.
பொருளாதார மந்தம் என்பது உலகம் முழுவதும் விரிவடைந்துகொண்டே வருகிறது. வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து விட்ட போதிலும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஓரளவு வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து வருகின்றன. இது எப்படி சாத்தியம்? மேலை நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியினால் அந்நாடுகளுக் கான ஏற்றுமதி குறைந்து விட்டது. ஆனால், ஆடம்பரப் பொருட்கள், வெளிநாட்டுக் கார்கள், தங்கம் என்று இறக்குமதி உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுதான் வளரும் நாடுகளின் வளர்ச்சியாக வெளிப்படுகிறது.
ஏற்றுமதியை விட இறக்குமதிகள் உயர்ந்த காரணத்தால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
மூலதனத்தின் பயணத் திட்டம் : இன்றைக்கு மூலதனத்தின் தாயகமும் மையமும் அமெரிக்கா என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. பிற நாடுகள் மூல தனத்தின் அதன் வெளிவட்டத்தில் உள்ளவை. இதில் மையத்திற்கும் வெளிவட்டத்திற்கும் பெருமளவில் வேறுபாடுகள் உண்டு.
வெளிவட்டத்தில் லாபம் அதிகம் கிடைக் கும் என்றால் மூலதனம் அங்கே பாய்ந்து ஓடும். ஆனால், அங்கு லாபம் குறைந்தாலோ, அல்லது அந்த நாடுகளில் நெருக்கடி தோன்றினாலோ அது மையத்திற்குத் திரும்பி விடும். மையத்தில் லாபம் குறைவாக இருந்தா லும் கூட அது மையத்திற்குத்தான் திரும்பும். ஏனெனில் அப்போது அது மூலதனத்தின் பாதுகாப்பு குறித்த பிரச்சனையாக மாறி விடுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தி யாவிற்குள் மூலதனம் வந்ததும் அப்படித்தான். இன்று வெளியேறிக் கொண்டிருப்பதும் அப்ப டித்தான்.
ஒரு நாட்டிற்குள் டாலர், அளவிற்கு அதிகமாக நுழையும் போது, அந்நாட்டின் கரன்சி மதிப்பு உயர்ந்து அது அந்நாட்டின் ஏற்றுமதிச் சந்தையில் சில பிரச்சனைகளை உருவாக்கும். அதே போன்று அளவிற்கதிக மாக டாலர் நாட்டை விட்டு வெளியேறும் போது அந்நாட்டு நாணயத்தின் மதிப்பை மட்டுமல்லாது, உற்பத்தியினையும் வீழ்ச்சி யுறச் செய்யும். இந்திய நாடு இத்தகைய இரண்டு பிரச்சனைகளையும் தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறது.
இவர்கள் குற்றம் குறைந்ததல்ல! : உலகப்பொருளாதார மந்தமும் நிதி மூலதனத்தின் போக்கும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கான சர்வதேசக் காரணிகள் எனி னும், இதில் இந்திய அரசின் குற்றம் எவ் வகையிலும் குறைந்ததல்ல. பொருளாதார மேதையான பிரதமருக்கும், உலகமயக்கொள் கையின் ஊதுகுழலான நிதியமைச்சருக்கும் அவரது படைப் பரிவாரங்களுக்கும் இதில் கணிசமான பங்கு உண்டு.
இன்று நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறித்து வாய் கிழியப் பேசுபவர்கள், 2010 - 2011ல் பற்றாக்குறை உயரத் துவங்கியவுடன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்கம், சொகுசுக் கார்கள் என ஆடம்பரப் பண்ட இறக்குமதி எதற்கும் தடையில்லை. இப்போதும் கூட இறக்குமதி வரி உயர்வினைத் தவிர வேறு நடவடிக்கைகள் எதுவுமில்லை. உள்நாட்டில் முதலீட்டிற்கான பணம் இருந்த போதும் இந்திய நிறுவனங்கள் தங்களின் உள்நாட்டு தேவைகளுக்காக அந்நிய கடன் களாக கோடிக்கணக்கான டாலர்களை திரட்ட அனுமதித்தது இவர்கள் தானே? நிதிப்பற்றாக் குறை அளவிற்கும் மேலாக வரிச்சலுகை அளித்த பணம் இந்தியப் பெருமுதலாளி களின் லாபத்திற்கும், உயர் செல்வந்தர்களின் இறக்குமதி வெறிக்கும் தானே உதவியது? எண்ணெய் விலையின் ஒரு பகுதியை ரூபாயாகத் தரலாம் என்ற ஈரானின் சலுகை காரணமாக, இந்தியாவிற்கு இன்று 8.5 பில்லியன் டாலர் வரை, அந்நியச் செலாவணி அனுகூலம் கிடைத்துள்ளது.
அன்று அதை உதறித் தள்ளியது இதே மன்மோகன் அரசு தானே? நடப்புக் கணக்குப் பற்றாக்குறை உயர்வில் சாமானிய மக்களின் பங்கு எதுவுமில்லை. ஆனால் அது உருவாக்கியிருக்கும் நெருக் கடிச் சுமையினை சுமப்பதில் அவர்கள் பங்கு மிக மிக அதிகம். ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் முதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் சலுகை அளிக்கும் போது சரியாத பங்குச் சந் தை, சாமானிய மக்களின் உணவுப் பாது காப்பிற்காக ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கும் வகையில் (இதுவே போதுமானதல்ல என்பது வேறு விஷயம்) சட்டம் இயற்றினால் சரியு மாம்.
உடனே, இது பொருத்தமான நேரமல்ல என முதலாளித்துவ ஊதுகுழல்கள் அனைத் தும் ஒரே குரலில் ஊதுகின்றன.
சரியான தீர்வு! : மூலதனப் போக்குவரத்து மீது கட்டுப் பாடுகள், தேவையற்ற இறக்குமதிகளுக்குத் தடை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை யினை குறைக்க முடியும். ஆனால், அதுவும் கூட மக்களின் வாங்கும் சக்தியினைத் தீர் மானிக்கின்ற ரூபாயின் உள்நாட்டு மதிப்பு வீழ்ச்சிக்குத் தீர்வாகாது.
உலகமயக் கொள்கை களுக்கு விடை கொடுப்பது ஒன்றுதான் இறுதி யான தீர்வாகும். அது வரை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல நெருக்கடிகள் மீண்டும் மீண்டும் வரவே செய்யும். எனினும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, அதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியினை அதிகரிக்கும் வகையில் பொது முதலீடுகள் மூலம் அரசு தலையிட வேண்டும். இந்தக் கோரிக்கை யினை முன் வைத்துப் போராட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.
No comments:
Post a Comment