உலகைச்சுற்றி-- எஸ்.பி.ராஜேந்திரன்
ஹிட்லரின் குரல்...
1933.“உலக
மனிதர்களிலேயே நாங்கள் வேறுபட்டவர்கள்; தனித்துவம் மிக்கவர்கள்;
உயர்ந்தவர்கள்” என்று எக்காளமிட்டு, ஜெர்மானிய இனமே உலகில் உயர்ந்த இனம்
என்ற வெறியுணர்வு கொண்டு, உலகையே அழிக்கத் துடித்தான் பாசிசத்தின் விளை
நிலமாம் ஹிட்லர்.வெறும் 6 ஆண்டுகள். இரண்டு பெரும் உலகப் போர்கள். 5 கோடி
மக்களை கொன்றொழித்தான் அந்த மாபாதகன் ஹிட்லர்.
2013.சரியாக 80 ஆண்டுகள் கழித்து, ஹிட்லரின் அதே குரல். ஒபாமாவின் வாயிலிருந்து தெறித்து விழுகிறது.“நாம் வேறுபட்டவர்கள்; நாம் தனித்துவம் வாய்ந்தவர்கள்; இது அமெரிக்காவின் தனித்துவம்” என்று அமெரிக்க மக்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.உலகில் எந்த நாடேனும் தவறிழைப்பதாகத் தெரிந்தால் அந்நாட்டிற்கு தண்டனை தர கடவுளால் ஆசீர்விதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் என தனக்கு முன்பு போர்வெறியன் ஜார்ஜ் புஷ் சொன்னதையே, ஒபாமாவும் சொல்கிறார்.
சிரியா மீது வன்மம் கொண்டு கொக்கரிக்கிறார்.உண்மைதான்.தனித்துவம் மிக்கவர்கள்தான் அமெரிக்கர்கள்!கடந்த 12 ஆண்டுகளில் 8 நாடுகள் மீது போர் நடத்தி, பல்லாயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்தவர்கள் அமெரிக்க ஆட்சியாளர்கள்!உலகில் வேறு யாரும் இத்தனை பெரிய ரத்தவெறியாட்டத்தை நடத்தியதில்லை. அந்த வகையில், அமெரிக்கர்கள் ‘தனித்துவம்’ வாய்ந்தவர்கள்தான்.அதனால்தான், மனிதகுல வரலாற்றால் மிக அதிகமாக வெறுக்கப்பட்ட ஹிட்லரைப் போலவே, இன்றைக்கு சிரியா விவகாரத்தில் உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்படக்கூடிய நபராக மாறிப்போயிருக்கிறார் ஒபாமா. அவரது சொந்த நாட்டிலேயே மரியாதை தேய்ந்து கொண்டிருக்கிறது.அதை உணராமல் அவர்களை உசுப்பேற்ற முயற்சிக்கிறார் ஒபாமா.
அதைத்தான் மிக அற்புதமான வார்த்தைகளிலும், கடுமையான எச்சரிக்கையோடும் சாடியிருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.“நோக்கம் எதுவாக இருப்பினும், `நாம் வேறுபட்டவர்கள்; நா மே உயர்ந்தவர்கள்’ என்று சொல்லிச் சொல்லி மக்களைத் தூண்டுவது ஆபத்தானது. இறைவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சமமானவர்களே” என்று சாட்டையடி கொடுத்திருக்கிறார் புடின்.
உண்மையில் “அமெரிக்காவின் தனித்துவம்” என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் மாவீரர் ஸ்டாலினே!அமெரிக்காவுக்கு பெருமைதரும் வகையில் அல்ல... அமெரிக்காவை எள்ளி நகையாடும் பொருட்டே ஸ்டாலின் அந்த வார்த்தையைப் பிரயோகித்தார்.1930களில் இந்த உலகைக் குலுக்கிய ‘பொருளாதாரப் பெருமந்தம்’ 1920களிலேயே துளிர்விட ஆரம்பித்திருந்தது.ஜெர்மனி உட்பட ஐரோப்பாவின் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் எல்லாம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணற ஆரம்பித்தன.
அனைத்து நாடுகளிலும் உழைக்கும் வர்க்கம் வீதியில் இறங்கிப் போராடத் துவங்கியது. முதலாளி - தொழிலாளி வர்க்க மோதல் மிகக் கூர்மையாக எழுந்தது. ஆஹாவென்று எழுந்து வெற்றிபெற்றிருந்த ரஷ்யப்புரட்சி, உலகப் பாட்டாளி வர்க்கத்தை ஈர்த்தது. செங்கொடியின் கீழ்தான் உலகிற்கு விடுதலை பிறக்கும் என்று பெருவாரியான மக்கள் உறுதியாக நம்பினார்கள்.
அதன்பால் அணிதிரண்டார்கள். கம்யூனிஸ்ட் அகிலம் உதயமானது.ஆனால், அமெரிக்கர்கள் மட்டும் இதுபோன்ற புரட்சியில் ஆர்வம் கொண்டவர்களாக இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்து, பிறரை உறிஞ்சிப் பிழைத்த அமெரிக்க சமூகம், லாபம் சார்ந்த - தனிநபர் நலன் சார்ந்த - சமூக ஏற்றத்தாழ்வை சகித்துக் கொள்ளப் பழகிவிட்ட பரவலான நடுத்தர வர்க்க சமூகம் அது.1929ம் ஆண்டுஓர் நிகழ்வில் இதுபற்றி பேசிக் கொண்டிருந்த போது, அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜேஸ் லவ்ஸ்டன், ஸ்டாலினிடம், புரட்சியில் அமெரிக்கர்களின் ஆர்வமின்மையைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது, “ஆமாம், அமெரிக்கர்கள் தனித்துவம் மிக்கவர்கள்” என்று ஸ்டாலின் நையாண்டியாக இடித்துரைத்தார்.“அமெரிக்கர்களின் இப்படிப்பட்ட தனித்துவம் ஒரு பயங்கரமான நோய்; தீர்க்க முடியாத நோய்” என்று 1930ல் சிகாகோவின் கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.மில்க்ராம் என்பவர் கூறினார்.
சுயநலம் - லாபவெறி- ஆதிக்க உணர்வு என்ற அந்த நோய் வளர்ந்து வளர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தாரக மந்திரமாய் இன்று மாறியிருக்கிறது.உலகையே ஆளப்பிறந்தவர்கள் நாம்; ஏனென்றால் அமெரிக்கர்களாகிய நாம் வேறுபட்டவர்கள்; தனித்துவம் வாய்ந்தவர்கள்” என்ற வெறி முழக்கம் அமெரிக்க ஊடகங்களிலும், அமெரிக்க அரசியல் தலைவர்களின் பேச்சுக்களிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி தீவிரமாகும் போதெல்லாம் அமெரிக்காவின் இந்த முழக்கமும் தீவிரமடைகிறது; அன்றைக்கு ஸ்டாலின் நையாண்டி செய்ததைப் போல இன்று உலகமே எள்ளி நகையாடுகிறது என்பதை உணராமல்!
ஹிட்லரின் குரல்...
2013.சரியாக 80 ஆண்டுகள் கழித்து, ஹிட்லரின் அதே குரல். ஒபாமாவின் வாயிலிருந்து தெறித்து விழுகிறது.“நாம் வேறுபட்டவர்கள்; நாம் தனித்துவம் வாய்ந்தவர்கள்; இது அமெரிக்காவின் தனித்துவம்” என்று அமெரிக்க மக்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.உலகில் எந்த நாடேனும் தவறிழைப்பதாகத் தெரிந்தால் அந்நாட்டிற்கு தண்டனை தர கடவுளால் ஆசீர்விதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் என தனக்கு முன்பு போர்வெறியன் ஜார்ஜ் புஷ் சொன்னதையே, ஒபாமாவும் சொல்கிறார்.
சிரியா மீது வன்மம் கொண்டு கொக்கரிக்கிறார்.உண்மைதான்.தனித்துவம் மிக்கவர்கள்தான் அமெரிக்கர்கள்!கடந்த 12 ஆண்டுகளில் 8 நாடுகள் மீது போர் நடத்தி, பல்லாயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்தவர்கள் அமெரிக்க ஆட்சியாளர்கள்!உலகில் வேறு யாரும் இத்தனை பெரிய ரத்தவெறியாட்டத்தை நடத்தியதில்லை. அந்த வகையில், அமெரிக்கர்கள் ‘தனித்துவம்’ வாய்ந்தவர்கள்தான்.அதனால்தான், மனிதகுல வரலாற்றால் மிக அதிகமாக வெறுக்கப்பட்ட ஹிட்லரைப் போலவே, இன்றைக்கு சிரியா விவகாரத்தில் உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்படக்கூடிய நபராக மாறிப்போயிருக்கிறார் ஒபாமா. அவரது சொந்த நாட்டிலேயே மரியாதை தேய்ந்து கொண்டிருக்கிறது.அதை உணராமல் அவர்களை உசுப்பேற்ற முயற்சிக்கிறார் ஒபாமா.
அதைத்தான் மிக அற்புதமான வார்த்தைகளிலும், கடுமையான எச்சரிக்கையோடும் சாடியிருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.“நோக்கம் எதுவாக இருப்பினும், `நாம் வேறுபட்டவர்கள்; நா மே உயர்ந்தவர்கள்’ என்று சொல்லிச் சொல்லி மக்களைத் தூண்டுவது ஆபத்தானது. இறைவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சமமானவர்களே” என்று சாட்டையடி கொடுத்திருக்கிறார் புடின்.
உண்மையில் “அமெரிக்காவின் தனித்துவம்” என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் மாவீரர் ஸ்டாலினே!அமெரிக்காவுக்கு பெருமைதரும் வகையில் அல்ல... அமெரிக்காவை எள்ளி நகையாடும் பொருட்டே ஸ்டாலின் அந்த வார்த்தையைப் பிரயோகித்தார்.1930களில் இந்த உலகைக் குலுக்கிய ‘பொருளாதாரப் பெருமந்தம்’ 1920களிலேயே துளிர்விட ஆரம்பித்திருந்தது.ஜெர்மனி உட்பட ஐரோப்பாவின் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் எல்லாம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணற ஆரம்பித்தன.
அனைத்து நாடுகளிலும் உழைக்கும் வர்க்கம் வீதியில் இறங்கிப் போராடத் துவங்கியது. முதலாளி - தொழிலாளி வர்க்க மோதல் மிகக் கூர்மையாக எழுந்தது. ஆஹாவென்று எழுந்து வெற்றிபெற்றிருந்த ரஷ்யப்புரட்சி, உலகப் பாட்டாளி வர்க்கத்தை ஈர்த்தது. செங்கொடியின் கீழ்தான் உலகிற்கு விடுதலை பிறக்கும் என்று பெருவாரியான மக்கள் உறுதியாக நம்பினார்கள்.
அதன்பால் அணிதிரண்டார்கள். கம்யூனிஸ்ட் அகிலம் உதயமானது.ஆனால், அமெரிக்கர்கள் மட்டும் இதுபோன்ற புரட்சியில் ஆர்வம் கொண்டவர்களாக இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்து, பிறரை உறிஞ்சிப் பிழைத்த அமெரிக்க சமூகம், லாபம் சார்ந்த - தனிநபர் நலன் சார்ந்த - சமூக ஏற்றத்தாழ்வை சகித்துக் கொள்ளப் பழகிவிட்ட பரவலான நடுத்தர வர்க்க சமூகம் அது.1929ம் ஆண்டுஓர் நிகழ்வில் இதுபற்றி பேசிக் கொண்டிருந்த போது, அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜேஸ் லவ்ஸ்டன், ஸ்டாலினிடம், புரட்சியில் அமெரிக்கர்களின் ஆர்வமின்மையைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது, “ஆமாம், அமெரிக்கர்கள் தனித்துவம் மிக்கவர்கள்” என்று ஸ்டாலின் நையாண்டியாக இடித்துரைத்தார்.“அமெரிக்கர்களின் இப்படிப்பட்ட தனித்துவம் ஒரு பயங்கரமான நோய்; தீர்க்க முடியாத நோய்” என்று 1930ல் சிகாகோவின் கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.மில்க்ராம் என்பவர் கூறினார்.
சுயநலம் - லாபவெறி- ஆதிக்க உணர்வு என்ற அந்த நோய் வளர்ந்து வளர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தாரக மந்திரமாய் இன்று மாறியிருக்கிறது.உலகையே ஆளப்பிறந்தவர்கள் நாம்; ஏனென்றால் அமெரிக்கர்களாகிய நாம் வேறுபட்டவர்கள்; தனித்துவம் வாய்ந்தவர்கள்” என்ற வெறி முழக்கம் அமெரிக்க ஊடகங்களிலும், அமெரிக்க அரசியல் தலைவர்களின் பேச்சுக்களிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி தீவிரமாகும் போதெல்லாம் அமெரிக்காவின் இந்த முழக்கமும் தீவிரமடைகிறது; அன்றைக்கு ஸ்டாலின் நையாண்டி செய்ததைப் போல இன்று உலகமே எள்ளி நகையாடுகிறது என்பதை உணராமல்!
No comments:
Post a Comment