Thursday, June 12, 2014

வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை
வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், செங்கொடித் தொழிற்சங்க இயக்கம் இவற்றின் வளர்ச்சியில் ஒருஅடையாள முகமாகிவிட்டவர் அருமைத் தோழர் ஆர்.உமாநாத்.நாட்டின் வரலாற்றில் சுதந்திரப்போராட் டத்தோடும் சுதந்திர இந்தியாவில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தோடும் கடல் நீரில் உப்பு போலக் கலந்திருக்கிறது அனைவராலும் “ஆர்.யு.” என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கை. சிறுவனாக வறுமையோடு போராடிய அவர், உயர் கல்விக்கானவாய்ப்பு கிடைத்தபோது, அதனைத் தனது சொந்த வறுமை யைப் போக்கிக்கொள்வதற்கான வழியாக அமைத்துக்கொள்ளாமல், தேசத்து மக்களின் வறுமைக்குக் காரணமான முதலாளித்துவ -நிலப்பிரபுத்துவச் சுரண்டல் முறையை ஒழிப்பதற்காகவும், அதற்கெதிராக ஒன்றுபட விடாமல்மக்களைக்கூறுபோடும் மதவாத-சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் தம்மை ஒப்படைத்துக்கொண்டவர்.
உழைப்பாளிகள் இன்று அனுபவிக்கிற உரிமைகளில் அவருடைய குருதியும் வியர்வையும் கலந்திருக்கின்றன என்றால் மிகையல்ல.1939ல் இயக்கப் பணிகளில் கூடுதல் முனைப்புடன் ஈடுபட அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்துவெளியேறினார் உமாநாத். தொடர்ந்து கட்சியின் பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.அவரை,போலீசார் கண்டுபிடித்து கைது செய்தார்கள். அலிப்பூர் சிறையில் அவர் மற்ற தோழர்களோடுஅடைக்கப்பட்டார். இன்றைய நிலைமைகளோடு ஒப்பிடும் போது அந்நாட்களில் சிறை வாழ்க்கை என்பதுமிக கொடூரமானதாக, சொல்லொணா துயரங்கள் மிகுந்ததாக இருந்தது. அரசியல் கைதிகள் மற்ற கிரிமினல் குற்றவாளிகளைப் போலவே நடத்தப்பட்டனர். விடுதலை போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து ஊக்கமிழக்க செய்வது, அரசியல் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டதன் நோக்கம்.
ஆனால், நாடும் மக்களும் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டதை எதிர்த்துபோராட புறப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள், சிறைச்சாலைக்கு உள்ளேயும் அடக்குமுறைகளை எதிர்த்து போராடினார்கள். கம்யூனிஸ்ட் டுகளின்அத்தகைய போராட்டங்களால்தான் அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்லாமல் சிறையின் மற்றகைதிகளுக்கும் பல்வேறுஅடிப்படை உரிமைகளையும் சலுகைகளை யும் வழங்க வேண்டிய கட்டாயம் பிரிட்டிஸ் அரசுக்கு ஏற்பட்டது.சிறையில் இருந்து விடுதலையான பின் பம்பாய் நகருக்கு சென்ற உமாநாத் அங்கே கட்சி அலுவலகத்தில் தங்கி பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு, தொழிற்சங்க இயக்கத்தை கட்டி வளர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொழிலாளர்களிடையே செயல்பட்ட கம்யூனிஸ்ட்டுகளின் பன்முகப் பணிகள் மகத்தானவை.
அன்றைய சூழலில் கோவையின் ஆலைகளில்வேலை செய்த தொழிலாளர்கள் பெரும்பாலும் எழுத படிக்கவும் தெரியாதவர்களாக இருந்தனர். அவருடைய உரிமைகளை பற்றி, சட்டங்கள் பற்றி, அவர்களுக்கு புரியவைப்பது முக்கியமான பணி.நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடுவது டன், பல்வேறு பிரச்சனைகளில் தொழிலாளர் களுடன்கலந்தாலோசிப்பது, எடுக்கப்படும் முடிவுகளில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, படிப்படியாக அவர்களை கட்சிக்குள் கொண்டுவருவது என்று ஒவ்வொரு பணியையும் தனக்கே உரிய தனித்தன்மையோடு திறம்பட மேற்கொண்டார் அவர்.இன்று இருப்பது போன்ற நவீன ஒலிபெருக்கி ஏதுமற்ற அந்த நாட்களில், ஆலை வாயில் கூட்டங்களில் உரத்தக்குரலில் பேசியாக வேண்டும். ‘மெகாபோன்’ என்ற எளிய உலோக கூம்பு வடிவ கருவிதான்அன்றைய ஒலிபெருக்கி. அதனைப் பயன்படுத்தி தொழிலாளர்களை உமாநாத், கே. ரமணி ஆகியதலைவர்கள் அணிதிரட்டினார்கள்.இதில் உமாநாத்தின் இன்னொரு சிறப்பையும் குறிப்பிட்டாக வேண்டும் தமிழை தாய் மொழியாக கொண்டிராத அவர் தொடக்க நாட்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டி இருந்தது. அவரது பேச்சை கே. ரமணி தமிழாக்கம் செய்வார்.
தொழிலாளரோடு நெருங்குவ தற்கு மொழி ஒரு முக்கியத் தேவை என்ற புரிதலோடு உமாநாத் தமிழ் கற்றார். பிற்காலத்தில் பொதுமக்களிடத்திலே மிகச் சிறப்பாகதமிழிலியேஉரையாற்றக்கூடிய, சக்தி வாய்ந்த தொரு பேச்சாளராக அவர் உருவெடுத்தார்.இந்தியா விடுதலை பெற்ற பிறகும் கூட உழைப்பாளிகள் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சக்திகளால் தொழிலாளர்கள் விழிப்படைவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.கோவை முதலாளிகள் அரசாங்கத்தையும், காவல்துறையையும் நாடினர். 1948ல் ஒரு கொலை வழக்கில் உமாநாத்தின் பெயர் மோசடியான முறையில் சேர்க்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அன்றையசூழலில் அவர் சிறையிலிருந்து வெளியே வருமாறு கட்சி கூறியது! அதை ஏற்று, கோவை மத்திய சிறையிலிருந்து, கடுமையான கண்காணிப்புகள் இருந்தும் காவலர்களின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டுத் தப்பிய உமாநாத், திருச்சி நகரத்தை வந்தடைந்தார்.அவரது தொழிற்சங்க அனுபவம் ரயில்வே தொழிலாளர்களை அணிதிரட்டப் பயன்பட வேண்டும் என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்தது. அதனை ஏற்று ரயில்வே தொழிலாளர்களிடையே செயல்பட்டு, அவர்களது போராட்டங்களுக்கு அவர் வழிகாட்டினார்.
1949 மார்ச் மாதம் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களின் வீரம் செரிந்த வேலைநிறுத்தப் போராட்டம் வரலாற்றில் இடம்பெற்றது. திருச்சி பொன்மலை பகுதியில் தீரமிக்க தியாகிகளை உருவாக்கிய அந்தப் போராட்டத்தில் உமாநாத்தின் பங்களிப்பு தலையாயது.தொடர்ந்து தலைமறைவாகவே செயல்பட வேண்டியிருந்த நிலையில், பின்னர் சென்னைக்கு வந்து, பல்லாவரம் காவல்நிலையத்திற்கு அருகிலேயே தங்கினார்.அவருடன் தோழர்கள் எம். கல்யாணசுந்தரம், லட்சுமியம்மாள், அவரது மகள் பாப்பா ஆகியோரும் தங்கியிருந்து ரகசியமான முறையில் இயக்கப்பணிகளை மேற்கொண்டனர். ஆயினும் அவர்கள் அங்கே இருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்தபோலீஸ்காரர்கள், அவர்கள் இருந்த வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். போலீசார் சூழ்ந்துகொண்டதை அறிந்ததும், மற்ற இடங்களில் இருக்கக்கூடிய தோழர்களைப் பாதுகாப்பதற்காக வீட்டில் இருந்த பல ரகசிய ஆவணங்களை எரித்துவிட்டார் லட்சுமியம்மாள். மாடியில் ஏறித் தப்பிக்க முயன்ற உமாநாத், தவறி கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது. கால் முறிந்தும் மன உறுதிமுறியாத அவர் மீதும் மற்றவர்கள் மீதும்போலீசார் திருச்சி சதி வழக்குப் பதிவு செய்தனர்.இத்தகைய வழக்குகள் நீதிமன்றம்வந்தபோது, தோழர்கள் தரப்பில் தானே நீதிபதிமுன் வாதாடுகிற அளவுக்கு சட்ட ஞானத்தையும் வளர்த்துக்கொண்டிருந்தார் அவர். இப்படிப்பட்ட திறமைகளை இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்திய அவர், 1970 முதல் 1990ம் ஆண்டுகள் வரையில் பொதுவாகத் தமிழகம் முழுவதும், குறிப்பாகத் திருச்சியில் செங்கொடியின் கீழ் தொழிற்சங்கங்களைக்கட்டி வளர்ப்பதற்கு வழிகாட்டினார்.தொழிற்சங்கத் தலைவராக மட்டுமல்ல,அனைத்துப் பகுதி மக்களின் பிரதிநிதியாக வும் நாடாளுமன்றமக்களவை, மாநில சட்டப்பேரவை இரண்டிலும் குறிப்பிடத்தக்க பணியாற்றினார்.
நாடாளுமன்ற மக்களவைக்குப் புதுக்கோட்டைத் தொகுதியிலிருந்து இரண்டுமுறை, தமிழக சட்டமன்றத்திற்கு நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு அவைகளிலும்அவர் நிகழ்த்திய உரைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஆவணங்களாகத் திகழக்கூடியவை. அதற்குக்காரணம், விவாதிக்க இருக்கும் எந்தப் பொருள் குறித்தும் முழுமையாகப் புரியதுகொள்வதிலும், அதுதொடர்பான உண்மைகளை உள்வாங்கிக்கொள்வதிலும் ஒரு முன்னுதாரமாகத் திகழ்ந்தார்.இவ்வாறு திரட்டிய உண்மைகளின் பலத்தோடு அவர் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களின் நிர்வாகங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் அவர் வாதாடுகிறபோது, அதை எதிர்கொள்ள முடியாமல் மற்றவர்கள் திணறிப்போவார்கள்.மக்களின் பிரதிநிதியாக வெற்றிகரமாகச் செயல்பட்டதற்கு ஆதாரமாகப் பல்வேறு நிகழ்வுகள் உள்ளன.
ஒரு சோற்றுப் பதமாக இங்கே ஒரு நிகழ்வைக் காணலாம்: தமிழகத்தில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம் வலுவானதொரு அமைப்பாக வளர்ந்துகொண்டிருந்தது. விவசாய இடுபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், விளைபொருள்களுக்கு நியாயமான விலை கோரியும், விவசாயிகளின் இதர நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டங்களைத் தொடங்கிய அந்தச் சங்கம் விரைவிலேயே முக்கியமானதொரு அமைப்பாக அடையாளம் பெற்றது. திருச்சியின் திருவெறும்பூர் அருகில் உள்ளகூத்தப்பா கிராமத்தில், தலித் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்த அந்தச்சங்கத்தினர், தலித் மக்களை விரட்டவும் முயன்றனர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த உமாநாத்உடனடியாக அந்தப் பிரச்சனையை அவையில்எழுப்பினார். தலித் மக்களுக்காக சட்டமன்றத் திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்கினார்.
அந்தப் பாட்டாளிகளின் நிலம் மீட்கப்பட்டது; அவர்களுக்கு அநீதியிழைக்க முயன்ற நாராயணசாமி நாயுடு சங்கம் தனதுமுக்கியத்துவத்தை இழந்தது.‘சிம்கோ’ நிறுவன தொழிலாளர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமைகளுக்காகப் போராட்டக் களம் இறங்கினர். 125 நாட்கள் நடந்த அந்தப் போராட்டத்தையொட்டி தினமும் சட்டமன்றத்தில், அந்தத் தொழிலாளர்களின் நியாயத்தை எதிரொலித்தார் உமாநாத். அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் தொழிலாளர்களுக்குத் துணையாகத் திரட்டினார். இறுதியில்அன்றைய எம்.ஜி.ஆர். அரசு, தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தது.இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள் ஏராளமாக இருக்கின்றன. கட்சியின் முழுநேர ஊழியராக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஒரு முறை, அவருடனும் தோழர்கள் கே. ரமணி,வெங்கிடு ஆகியோருடனும் உரையாடிக் கொண்டிருந்தபோது, தொடக்கத்தில் ஊதியம்என எதுவும் இல்லாமல் பல நாட்கள், தொழிலாளர்கள் கொண்டுவந்து தரும் உணவைப் பகிர்ந்துகொண்டதை நினைவுகூர்ந்தனர்.
விடுமுறைநாட்களில் வெறும் பட்டாணியும் வேர்க்கடலையுமே உணவு!இந்த எளிமையும், தியாகமும், கூரிய அரசியல் தெளிவும், அயராத ஈடுபாடும்தான் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராக உயர்த்தியது. நாடு தழுவிய பிரச்சனைகளில் கட்சி சரியான நிலைபாடுகளை மேற்கொண்டதில் பங்களித்தார்.பொதுவாழ்க்கைக்கு வருகிற எல்லோராலும் தங்களது சொந்தக் குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள முடிவதில்லை. தோழர் உமாநாத் - தோழர் பாப்பா இவர்களின் குடும்பம் இதிலேயும் மிகச்சிறந்த முன்னுதாரணம். தலைமறைவாகக் கட்சிப் பணிகளைச் செய்துகொண்டிருந்த நாட்களில்தான் இருவரது நட்பு காதலாக மலர்ந்தது. அவர்களது இணக்கமும் இயக்கப் புரிதலும் எல்லாத்தலைமுறைகளுக்கும் ஒரு வாழ்க்கைப் பாடம் என்றே சொல்லலாம். அது அவர்கள் இருவரோடு நின்றிடவில்லை.
அவர்களது மூன்று மகள்களுமே இயக்க வாழ்க்கையோடு தங்களை இணைத்துக்கொண்டவர்கள்தான். திண்டுக்கல்லில் மருத்துவராகப் பணியாற்றி காலமாகிவிட்ட லட்சுமி, திருச்சியில் வழக்கறிஞராக உழைப்பாளிகள் தரப்பில் வாதாடும் நிர்மலா ராணி, இன்று கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்களில் ஒருவராகச்செயல்பட்டுக்கொண்டிருக்கும் வாசுகி, இவர்களது குடும்பத்தினர் என எல்லோருமே இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள்.இயக்கப்பணியாற்றுகிற பலரது வாரிசுகள் அரசியலுக்கு வருவதில்லை என்பதைப் பார்க்கிறோம். வேறுசில கட்சிகளிலோ, குடும்ப வாரிசுகள் அரசியலுக்கு வருவதாகக் கூறிக்கொண்டு அதிகார பீடத்தில் ஏறிக்கொள்வதையும் பார்க்கிறோம். இவர்களோ, மக்கள் பணிக்காகவே அரசியல் என்று உணர்வுப்பூர்வமாகத் தங்களை ஒப்புவித்துக் கொண்டவர்கள். இத்தகைய வளர்ச்சிக்கு அடிப்படை, குடும்பஜனநாயகம் என்ற கோட்பாட்டை நிஜவாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டினார்கள் உமாநாத் - பாப்பாஇணை என்பதேயாகும். இப்படி வாழ்ந்து காட்டியது என்பதும், பொதுவாழ்க்கைக்கு வருவோருக்கான ஒருபடிப்பினைதான்.
கட்சியின் மாநாடுகளில் அதிகக் காலம் சிறைவாழ்க்கையையும் தலைமறைவு வாழ்க்கையையும் சந்தித்தவர்களில் ஒருவராக உமாநாத் பெயரும் பெருமிதத்தோடு அறிவிக்கப்படும். தேசத்தின் விடுதலைக்கு முன்னும் பின்னுமாக எட்டரை ஆண்டுகள் சிறைவாசம்! ஐந்து ஆண்டுகள் வனவாசம்போன்ற தலைமறைவு வாழ்க்கை! அருமையான இளமைக்காலத்தை வெறும் பொழுதுபோக்கு அல்லதுசுயநல வேட்கைஎன்று கடத்துகிறவர்களாக இளம் தலைமுறைகளை வார்த்துக்கொண்டிருக்கிறது இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கல். அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கிற, சமுதாய நலனுக்காக வாழ்வதே மானுட அழகு என்று உணர்த்துகிற வரலாற்றுச் சான்றாகியிருக்கிறார்தோழர் உமாநாத்.இப்படியொருவரை எப்போது இனி காண்போம் என்று ஏங்குவதற்கு மாறாக, முன்னெப்போதையும் விடஇடதுசாரிகளின், கம்யூனிஸ்ட்டுகளின் உறுதியான தலையீடும் பரந்த இயக்கமும் வலுவான செயல்பாடும்கட்டாயத் தேவையாகியுள்ள இன்றையகாலகட்டத்தில் அவரைப் போல் நம்மையும் தகவமைத்துக்கொள்வதே அவருக்குச் செலுத்திடும் செவ்வணக்கத்தை அர்த்த முள்ளதாக்கும்.
கட்டுரையாளர் - மத்தியக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
நன்றி: புத்தகம் பேசுது (ஜூன், 2014)

Tuesday, June 10, 2014

மறுபடியும் போராடுவேன்.. மறுபடியும் சிறை செல்வேன்



தில்லையாடி வள்ளியம்மை/தென் ஆப்பிரிக்காவில் உள்ள தில்லையாடி வள்ளியம்மையின் கல்லறை
நான் அவளைப் போய்ப் பார்த்தபோது அவள் மிகவும் பலவீனமாக படுத்த படுக்கையாய்க் கிடந்தாள். எழுந்து உட்காரவே சிரமப்பட்டாள்.“வள்ளியம்மா. ஜெயிலுக்குப் போனது பற்றி நீ வருத்தப்படவில்லையா?” நான் அவளிடம் கேட்டேன்.“வருத்தமா?, எனக்கா? நிச்சயம் இல்லை. இப்போது உடல் நிலை தேறியதும் மீண்டும் போராட்டத்துக்கு வருவேன். போலீஸ் கைது செய்தால் மறுபடியும் சிறைக்குச் செல்வேன்.”“ஆனால் சிறையில் இப்போதைக் காட்டிலும் அதிகமாகத் துன்புறுத்துவார்களே” “அதனாலென்ன? எந்தக் கஷ்டத்தையும் நான் ஏற்கத் தயார். எப்படியாவது நமது தாய் நாடு விடுதலை அடைய வேண்டும். இந்திய சுதந்திரத்திற்காக நான் எனது உயிரைவிடவும் தயாராக இருக்கிறேன்.
”இன்றைக்குச் சரியாக 100 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த உரையாடலைத் தனது சுயசரிதையில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார் தேசத் தந்தை மகாத்மா காந்தி.காந்தியுடனான இந்தச் சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களில் 22.10.1914 அன்று, அப்போது16 வயதே ஆன வள்ளியம்மை மரணமடைகிறாள்.
1914 ஜூலை 15 அன்று, தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு, ஜோகன்ஸ்பர்க் நகரத்தின் பிராம்ஃபோன்டைன் தோட்டத்தில் நடைபெற்ற கல்லறை திறப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காந்திஜி, “தில்லையாடி வள்ளியம்மையின் பெயர் தென் ஆப்பிரிக்க சத்யாக்ரகிகளின் சரித்திரத்தில் மட்டுமல்ல, இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்“ என்று கூறினார்.
இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தின் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள சிற்றூரான தில்லையாடியைச் சொந்த ஊராகக் கொண்டு, தங்கள் பிழைப்பிற்காகக் கடல் கடந்து தென் ஆப்பிரிக்கா சென்று அங்கே பேக்கரி மற்றும் பழக்கடை நடத்தி வந்த முத்துசாமி-மங்களம் தம்பதியரின் புதல்வியாக 1898 பிப்ரவரி 22-ல் ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர் வள்ளியம்மை.காந்திஜியின் அறைகூவலை ஏற்று, தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொடுமை மற்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தன் தாயாருடன் சேர்ந்து ஆர்வமுடன் பங்கேற்றார் வள்ளியம்மை.1913 அக்டோபரில் டிரான்ஸ்வால் நகர் முதல் நேடால் வரை நடைபெற்ற நடைபயணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்தது தென் ஆப்பிரிக்க அரசு. மூன்று மாதக் கடுங்காவல் தண்டனைக்குப் பின் சிறையைவிட்டு வெளியே வந்த சில நாட்களுக்குள், தாய்நாட்டு மண்ணைப் பார்க்காமலேயே வீரமரணம் எய்தினார் தில்லையாடி வள்ளியம்மாள்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வழிநெடுகிலும் மகத்தான பங்களிப்பை புரிந்துள்ள பெண் போராளிகளின் வரிசையில் தனி இடத்தைப் பெற்றுள்ள,நம் தமிழகத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மையின் வாழ்வும், உயிர்த்தியாகமும் எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீராங்கனைகளுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தது என்று கூறினால் அது மிகையன்று.இந்திய சுதந்திரத்தின் மாண்புகளை நினைவுகூர்வோம். தேசம் மீண்டும் அடிமைப்படுத்தப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்த உறுதிகொள்வோம்.
க.மன்னன்நன்றி: காப்பீட்டு ஊழியர்
மதநம்பிக்கைக்கு எதிரானதா மதச்சார்பின்மை?
க. கனகராஜ்


மதச்சார்பின்மை கூடுதல் முக்கியத்துவம் பெறுவது சமீபத்திய நிகழ்வாக இருக்கலாம். ஆனால் மதச்சார்பின்மையின் வேர்கள்மதம் தோன்றிய காலம் தொட்டே உள்ளன. மதச்சார்பின்மை மத விரோதமான கொள்கையல்ல. தன் மதத்தை, தன் கடவுளை நேசிப்பதற்கு எதிரானதுமல்ல. மாறாக, பிற மதங்களை இழிவுபடுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் எதிரானது. பிற மதத்தினரை துன்புறுத்துவதை தடுப்பது. இது மதச்சார்பின்மையின் சமூகக் கொள்கை. அரசு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையிலும் செயல்படாதிருப்பதே மதச்சார்பின்மையின் அரசியல் கொள்கை. ஷிவ் விஸ்வநாதன் (மோடியும் லிபரல்களின் தோல்வியும் - இந்து 23.5.2014) அவர்களும் மற்றும் சிலரும் திரிக்க முயல்வதுபோல எல்லாமதங்களின் அடிப்படையிலும் செயல்படுவதல்ல. அரசும், அரசியலும் பொதுவானது. மதநம்பிக்கையும், கடவுள் வழிபாடும் தனிநபர் சார்ந்தது.
இந்திய அரசியல் சட்டப்படி தான் இந்தியர் வாழ வேண்டுமென்று சட்டம் நிர்ப்பந்திக்கும். ஆனால் ஒரு மதத்தின் அடிப்படையில் வாழ வேண்டுமென யாரும், யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. மதச்சார்பின்மை எந்தவொரு மத நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. கேலியும் செய்வதில்லை. எந்தவொருமதமும் அரசுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதைத் தான் கேள்விக்குள்ளாக்குகிறது. அரசு நடவடிக்கையிலிருந்து ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று கோரி நிற்கிறது.எந்த மதமும் ஒற்றைக் கடவுளையும், ஒரே மாதிரி சடங்கு சம்பிரதாயங்களையும் கொண்டதாக இல்லை. இந்து மதத்தில் சைவம், வைணவம் (அதிலும் கூட வடகலை, தென்கலை) நாட்டார் தெய்வங்கள் போல, இஸ்லாத்தில் சன்னி, ஷியா, அலவி, வஹாபி, சுஃபி போல,கிறிஸ்துவத்தில் கத்தோலிக்கர், புரோட்டஸ்டன்ட், பாப்திஸ்து, லுத்ரன், பெந்தகோஸ்தே போல ஏராளமான பிரிவுகள் உள்ளன. இதரமதங்களிலும் கூட இப்படித்தான் இருக்கிறது. தெய்வங்களும், வழிபடு முறைகளும் ஒரே மதத்தின் உட்பிரிவுகளுக்குள்ளேயே வேறுபாட்டுடன் இருப்பதை காண முடியும். ‘அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு’ என்று வலியுறுத்தினாலும் அரியை வணங்கி, சிவனை வெறுப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடமாட்டேன்’ என்பது கூட தமிழில் உள்ள வழக்குதான்.
சிலுவையை வணங்குவோர் - மறுப்போர், மேரி மாதாவை வணங்குவோர் - மறுப்போர், ஷியா, சன்னி முஸ்லீம்களுக்கிடையிலான வேறுபாடு இவையெல்லாம் நாம் அறியாததல்ல. பூணூல் போடுவோரும் இல்லாதோரும் இந்துக்கள்தான். தாலிகளிலும், சடங்குகளிலும் எத்தனை பன்மைத்தன்மை. ஒரே மதத்திற்குள்ளும் ஒரே சாதிக்குள்ளும் கூட ஏராளமான வேறுபாடுகள் இணங்கியும், முரண்பட்டும் நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. எல்லா பன்மைகளும் ஒற்றைகளின் சேர்க்கையே. எல்லா ஒற்றைகளும் பன்மைகளின் பகுதியே. இதை உணராதோர் மட்டுமே சகிப்புத் தன்மையற்றவராக இருக்கிறார்கள். மதநம்பிக்கையுடையவர் மதச்சார்பற்றவராக இருக்க முடியும். ஏனெனில் மதச்சார்பின்மை அரசு மற்றும் பொதுவெளி சார்ந்ததே அன்றி தனி மனித நம்பிக்கை பற்றியதல்ல.
பாரதியைவிட காளி பக்தன், பராசக்தி பக்தன் உண்டா?, காந்தியை விட இந்து மதத்தின் மீதான பிடிப்பும், காதலும் கொண்டவர் உண்டா?, ஏன் விவேகானந்தர் இந்து துறவி தான். இவர்களை எவரேனும் மதவெறியர் என்று சொல்லத் துணிந்தது உண்டா? ஆனால் முகமது அலி ஜின்னா முஸ்லீம் மத பழக்கவழக்கங்களை கடைபிடித்தவரல்ல. சொல்லப்போனால் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கி திளைத்தவர். அவரது அரசியல்கொள்கை மதச்சார்பற்றது என்று சொல்ல முடியுமா?. எனவே அரசியல் நோக்கத்திற்காக மதத்தை பயன்படுத்துவதும், அரசியல் கொள்கைகளில் ஒரு மதத்திற்கு இடமளிப்பதுமே மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கை. ஷிவ் விஸ்வநாதன் ராகு காலம் பார்த்து வேலைக்கு வரும் ஒரு விஞ்ஞானியை கேள்விகேட்கக் கூடாது என்கிறார்.
ஒருவர் விஞ்ஞானியோ, அரசு ஊழியரோ அவர் வீட்டு எந்தவிழாக்களையும் ‘நல்ல நேரத்தில்தான்’ கொண்டாடுவேன் என்று சொல்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஆனால், அலுவலகத்திற்கு ராகு காலம் கழித்து தான் வருவார் என்பதை எப்படி ஏற்க முடியும்?. ராகு காலத்தில் வேலைக்கான நேர்முகத் தேர்வு வந்தால் போகாமல் இருந்துவிடுவார்களா?, எனது கடவுளுக்கு இந்தக்கிழமைதான் உகந்த நாள். எனவே அந்த தினத்தில் நான் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்வதை அனுமதிக்க முடியுமா?.
இப்போதைய ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பது கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர்களின் நடைமுறை. அதைத்தான் பின்பற்றி வருகிறோம். ராகு காலம் பார்ப்பதை பணிநிமித்தம் அனுமதிக்க முடியாது என்றால் அதனால் அவர் நிர்ப்பந்திக்கப்படுவதாக கருதினால் அவரை மாற்ற வேண்டுமே தவிர நடைமுறைகளை மாற்றிக் கொள்ள முடியாது. மதமாற்றம் குறித்து பேசப்புகுந்த ஷிவ்விஸ்வநாதன் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் மட்டும் மதமாற்றம் செய்வது போலவும், அதன் காரணமாக மதநம்பிக்கை உள்ள மத்திய தர வர்க்க இந்துக்கள் மோடிக்கு ஆதரவாக நின்றதாகப் பேசுகிறார். இஸ்லாமும், கிறிஸ்தவமும் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே மதமாற்றம் துவங்கிவிட்டது. நாடு முழுவதும் புத்த மதம் பரவியிருந்ததும் நான்கு திசைகளிலும் சென்று மனிதர்களையும், மன்னர்களையும் இந்து மதத்திற்கு ஆதிசங்கரர் மாற்றியதையும் மதமாற்றக் கணக்கில் இல்லாமல் எப்படி பார்ப்பது? கூன் பாண்டியன் சமண மதத்தை துறந்துவிட்டு சைவத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவரும், இஸ்லாமியருமா காரணம்.
எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டது யாரால் என்பதை இலக்கியங்கள் பதிவு செய்துதானே வைத்திருக்கின்றன. ஒரு மதத்தை பின்பற்றுவதும், இன்னொரு மதத்திற்கு மாறுவதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மேலும் மதமாற்றத்தை தடுப்பது சட்டங்களால் ஆகாது.சனாதன இந்து மதத்தில் இருந்த கொடூரமான சாதிய பாகுபாடுகள்தான் அடித்தட்டு மக்கள் மதமாறுவதற்கு காரணமாக இருந்தது என்று சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார் போன்றவர்களே குறிப்பிட்டுள்ளனர். சாதியின் பெயரால் பெரும்பகுதி மக்கள் கல்வி பெறுவது கூட தடுக்கப்பட்ட பின்னணியில்தான் மதமாற்றங்கள் நிகழ்ந்தன.
இன்றைக்கும் கூட நீடிக்கும் கோயிலுக்குள்ளும், பொதுப்பாதைகளிலும் நுழைவதை கூட தடுக்கும் நந்திகள் உடைத்து நொறுக்கப்பட வேண்டும். ஆனால் மதம் மாறுவதால் மட்டுமே இழிவுகள் ஒன்றும் மாறிவிடவில்லை என்பதையே மீனாட்சிபுரங்களும், தலித் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையும் வலியுறுத்தி நிற்கின்றன. இந்து மதத்தின் மிகப்பெரிய அடையாளமாக விளங்கும் சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11 சிகாகோவில் உரையாற்றுகிற போது, “பிரிவினைவாதத்தாலும், மதவெறியாலும் இந்த அழகிய உலகு நீண்ட நாட்களாக திணறிக்கொண்டு இருக்கிறது. இந்த பூமி முழுவதும் மதவெறி நிரம்பிக் கிடக்கிறது. உலகை மீண்டும், மீண்டும் அது ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. நாகரிகத்தை அழித்தது. எத்தனையோ நாடுகளை சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த கொடியஅரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்திருக்கும்.”ஷிவ் விஸ்வநாதன் மதச்சார்பற்றவர்கள் குறித்து சொல்லியிருப்பவை பலவும் மதவெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்படும் புளுகுமூட்டைகளே.
அதை அவரும் வழிமொழிந்திருப்பது வருத்தத்திற்குரியது. மதச்சார்பின்மையின் தோல்வி நிரந்தரமானால் அது மனித குலத்தின் தோல்வியாகவே முடியும். மதச்சார்பின்மை திரிக்கப்பட்டிருந்தால் அதை சரிபடுத்துவதும் வெற்றி பெற வைப்பதுமே மனித குல முன்னேற்றத்திற்கான பிரதானமான முன்நிபந்தனையாக இருக்கும்.

Monday, June 9, 2014

மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து பரிசீலனை மக்களிடம் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவோம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு அறிக்கை
புதுதில்லி, ஜூன் 9-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு கூட்டம் புதுதில்லி யில் ஜூன் 7,8 தேதிகளில் நடைபெற் றது. கூட்டத்தின் முடிவில் வெளியி டப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதா வது:
மக்களவைத் தேர்தல் முடிவு
மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து மத் தியக்குழு விவாதித்து பரி சீலனை அறிக்கை ஒன்றை நிறை வேற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் கட்சிக்கு பலவீனமான நிலை ஏற்பட் டுள்ள நிலையில் மத்தியக்குழு மிக ஆழமான விவா தத்தை நடத்தியது. தோல்விக்கான பிரதான பொறுப்பை கட்சியின் அரசியல் தலைமைக் குழு வும் மத்தியத் தலைமையும் ஏற்றுக் கொள்கிறது. கட்சியின்சுயேட்சையான பலத்தை விஸ்தரிக்காததும், கட்சியின் வெகுஜன அடித்தளத்தில் ஏற்பட்டு ள்ள சரிவும் தேர்தல் முடிவில் பிரதி பலித்துள்ளது. மேற்குவங்கத்தில் கட்சியும், இடது முன்னணியும் கடுமையான பின்ன டைவைச் சந்தித்துள்ள நிலையில் மேற்குவங்க தேர்தல் முடிவு குறித்து மத்தியக்குழு ஆய்வு செய்தது.
மேற்கு வங்கத்தில் கட்சிக்குள் எடுக்கப்பட வேண்டிய அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகள் குறித்து விவாதித்த மத்தியக்குழு, பணிகளை மேம்படுத்தி மக்களுடன் நெருக்கமான தொடர்பி னை ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தது. உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து கட்சி போராட்டங்களையும் இயக்கங்க ளையும் தலைமை தாங்கி நடத்தும். தொடர்ச்சியான தாக்குதலை சந்தித்து வரும் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதர வாளர்களை பாதுகாக்க உடனடி நட வடிக்கைகள் எடுக்கப்படும். முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு பெற்றுள்ள வெற்றிக்காக கட்சி யின் திரிபுரா மாநிலக்குழுவிற்கு மத்தி யக்குழு வாழ்த்து தெரிவிக்கிறது.
மிக அதிக வித்தியாசத்தில் இரண்டு தொ குதிகளையும் இடது முன்னணி கைப் பற்றியுள்ளதோடு, கட்சி மற்றும் இடது முன்னணி பதிவான வாக்குகளில் 64.4 சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. கட்சியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் ஸ்தாபன பணிகளை ஆய்வு செய்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்தியக்குழு முடிவு செய்துள்ளது.
மக்களிடம் செல்லவும், வெகுஜனங்களின் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு, மக்களின் வாழ்வாதார நலன்களையும், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க அயர்வற்ற போராட்டங்களையும், இயக்கங்களை யும் நடத்துவது என்று மத்தியக்குழு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்பட் டுள்ள புதிய அரசியல் சூழ்நிலையால் விடுக்கப்பட்டுள்ள சவால்களை ஒன்றுபட்டுச் சந்திப்பது என்று மத்தி யக் குழு முடிவு செய்துள்ளது.
திரிணாமுல் வன்முறைக்கு கண்டனம்
மேற்குவங்கத்தில் இடதுசாரி இயக் கங்களின் ஊழியர்கள் மற்றும் ஆதரவா ளர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் நிகழ்த்தப்படும் தொடர்ச்சி யான வன்முறை மற்றும் தாக்குதல்க ளை மத்தியக்குழு கண்டிக்கிறது. தேர் தலின் போதும் அதற்கு பின்பும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கள் மற்றும் ஆதரவாளர்கள் படுகொ லை செய்யப்பட்டுள்ளனர். கட்சி மற் றும் இடதுசாரி சக்திகள், ஜனநாயகத் தை பாதுகாக்கவும் மேற்குவங்கத்தில் தொ டுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை எதிர்த்தும் நாடு தழுவிய ஆதரவு இயக் கங்களை நடத்திடுமாறு மத்தியக்குழு அறைகூவல் விடுக்கிறது.
புதிய அரசு
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலை யில் விலைவாசி உயர்வு, வேலையின் மை, விவசாயத் துறை நெருக்கடி, பெண்களுக்கு எதிராக அதிகாரித்து வரும் குற்றங்கள் ஆகிய தீவிரமான பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பாஜக தலைமையிலான அரசு பிரச்சனைகளை தீவிரப்படுத்து வதிலும், பிளவுவாதத்தை தூண்டுவதி லும் தான் அதீத ஆர்வம் காட்டுகிறது. அரசியல் சாசனத்தில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஒரு அமைச்சர் பேசியிருப்பது பெரும் அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநில மக்களை மேலும் தனிமைப் படுத்தவே இது இட்டுச்செல்லும். இந்திய யூனியனுடன் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இணைந்தபோது அந்த மாநி லத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் படும் என அந்த மக்களுக்கு அளிக்கப் பட்ட வாக்குறுதிக்கு எந்த வகையிலும் ஊறு ஏற்படுத்தக்கூடாது.பாதுகாப்புத்துறை மற்றும் காப் பீட்டுத் துறை உள்ளிட்ட துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிப்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இத்தகைய நடவடிக்கை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. சுரங்கம் மற்றும் மின் துறைகளில் ஏராளமான திட்டங்களு க்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்குவதற்கான முயற்சிக ளும் மேற்கொள்ளப் படுகின்றன. இத னால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதோடு பழங்குடி மக்களின் உரிமைகளும் பாதிக்கப்படும். சுற்றுச் சூழல் அம்சங் கள் மற்றும் பழங்குடி, உள்ளூர் மக்களின் உரிமைகள் ஆகிய வற்றை கணக்கில் கொள்ளாமல் மோடி அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைக ளில் ஈடுபடக்கூடாது.
அதிகரிக்கும் வகுப்புவாத மோதல்கள்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து புதிய அரசு பொறுப்பேற் றவுடனேயே நாட்டில் பல்வேறு பகுதி களில் ஏராளமான வகுப்புவாத வன் முறைகள் நிகழ்ந்துள்ளன. குஜராத், மகாராஷ்டிரம், உ.பி., கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வகுப்புவாத மோதல் கள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறு கின்றன. புனேயில் இந்து ராஷ்டிர சேனை என்ற அமைப்பைச்சேர்ந்தவர் களால் இளம் இஸ்லாமிய மென் பொருள் பொறியாளர் படுகொலை செய் யப்பட்டுள்ளார். சிறுபான்மை மக்களை பழிவாங்கும் வெறியுடன் இத்தகைய வகுப்புவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப் படுகின்றன. இத்தகைய தாக்குதல் களை மத்தியக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து வகையான வகுப்புவாதத்தையும் கண்டிக்கும் அதே நேரத்தில் சிறுபான்மை சமூக மக்களை பாதுகாப்பதற்கான போராட் டங்களையும் கட்சி நடத்தும்.
பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக் கெதிராக அதிகரித்து வரும் பாலியல் ரீதியான குற்றங்கள் பெரும் கவலையை ஏற்படுத்துவதோடு பெண்கள் பாது காப்பாக வாழ்வதற்கான நாடு தானா இந்தியா என்ற கேள்வியையும் எழுப்பு வதாக உள்ளது. பதானில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வுக ளில் கூட குற்றவாளிகள் மீது நடவடிக் கை எடுப்பதற்கான அரசியல் உறுதி அரசுகளுக்கு இல்லை. உ.பி மாநிலம் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட மீறல்கள் ஏற்பட் டுள்ளதை தடுக்க உ.பி. மாநில அரசு தவறிவிட்டது.
சிறுமிகள் பாலியல் ரீதியாக படுகொலை செய் யப்பட்ட கொ டூர சம்பவத்திலும் கூட சமாஜ்வாதி கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் முரண்பட்ட கருத் துக்கள், இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் காவல் துறையின் அலட்சி யத்தை அங்கீகரிப் பதாக அமைந்துள் ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் பெண் களுக்கெதிரான பாலியல் ரீதியான தாக்குதல்கள்அதிகரித்துள்ளன.முதல் வரின் சொந்தத் தொகுதியில் கூட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர்கள் பெண் களுக்கெதிரான பாலியல் தாக்குதல் கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக் கள் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்த மாநி லங்களில் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு நீதி கிடைப் பதற்கான வாய்ப்பு உண்டா? என்ற அச்சத்தை எழுப் புவதாகவும் இவர்கள் கருத்துக்கள் உள்ளன. மேற்குவங்கத் திலும் பெண்களுக்கெதிரான தாக்கு தல்கள்அதிகரித்தவண்ணமேஉள்ளன.சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தவறிழைப்போர்கள் மீது உறுதியான, கடுமையான நடவடிக்கைகள் எடுப்ப தன் மூலம் பெண்களுக்கெதிரான கொ டுமைகளை சகித்துக் கொள்ள முடி யாது என்பதை நிலைநாட்ட வேண் டும்.
(ஐஎன்என்)
உடமைகளை விற்றால் தான் உயிர்பிழைக்க முடியும்
கே.சி.கோபிகுமார்
சமீபத்தில் பெங்களூருவில் மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அனந்தகுமார் இந்திய நாட்டின் மக்கள் நலன் பராமரிப்பில் தனியாரின் பங்கு அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இந்திய நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதி எட்டாக்கனியாக்கப்பட்டு கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் சிக்கி மக்கள் நலன் என்பது வியாபார பொருளாக மாற்றப்பட்டுள்ளது.இந்திய நாட்டின் ஓர் சாதாரண குடும்பம் தனது பொருளாதாரத்தில் பெரும் பகுதியை சுகாதார நலனுக்காக செலவிழக்கும் நிலை உள்ளது.
அதாவது மருத்துவம், மருந்துகள், சுகாதாரம் போன்றவற்றிக்கு செலவழித்து வருகின்றனர். மருத்துவமும், சுகாதாரமும் போன்ற அடிப்படை வசதிகளை ஆட்சியாளர்கள் தங்களது மக்களுக்கு செய்துதர வேண்டிய கடமையாகும். அதாவது சுகாதார நலன் பயப்பவை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சத்தான, சீரான உணவு, தரமான மருத்துவ சேவை செய்வது அரசின் கடமையாகும். ஆனால், நமது நாட்டில் இவை அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.அரசு தனது மக்களுக்கு நோய் வராமல் தடுத் திட நோய் குணப்படுத்தும் முறைகளை அமல்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். நமது ஆட்சி யாளர்கள் இதை செய்யத் தவறியதால் 40 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் சத்தான உண வின்றி நோய்வாய்ப்பட்டு வருகின்றனர்.
69 சதவீத மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளது. இதனால் பல வகையான நோய்கள் பரவி வருகிறது. கிராமப்புறங்களில் 30சத மானத்திற்கும் குறைவானவர்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.1990 முதல் ஆட்சியாளர்கள் அமல்படுத்திய தாராளமய, உலகமய கொள்கைகளின் விளைவு, புற்றீசல்கள் போன்று பல்லாயிரக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற தரமான ஆசிரியர்கள் இல்லாமல், உரிய கட்டமைப்பு இல்லாமல் பல நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனால் நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி நோயாளிகள் பணம் செலவழித்தும் தரமான சிகிச்சை இல்லாமல் இறந்து வருகின்றனர்.
மேலும் ஓர் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் `இங்கிலாந்து அரசு நமது நாட்டு மருத்துவர்கள் போதுமான பயிற்சி, தரம் இல்லாத காரணத்தினால் இந்தியாவிற்கு திரும்பி அனுப்பியுள்ளது’.ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் மோசமான தாராளமய மற்றும் உலகமயக் கொள்கையின் காரணமாக மீண்டும் மலேரியா, டெங்கு பயிலேரியா போன்ற நோய்கள் பரவி வருகிறது. அதுமட்டுமல்ல இந்த கொள்கையின் பரிசாக பறவைக் காய்ச்சல், எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்கள் வேகமாக பரவி வருகிறது.
உலகத்தில் காசநோயால் அவதிப்படும் நோயா ளிகளில் 21 சதவீதமும், தொழுநோய், மலேரியா 56 சதவீதமும், 40 சதவீதம் வாந்திபேதி போன்ற நோய்களால் அவதிப்படுவோர் இந்தியர்கள் ஆவர். இவைஅனைத்திற்கும் காரணம் இதுநாள் வரை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த மோசமான கொள்கை களாகும். அதே கொள்கைகளைத்தான் தற்போது மோடி சர்க்கார் கட்டவிழ்த்துவிட முயற்சிக்கிறது.நமது நாட்டின் 69கோடி மக்களுக்கு அத்தியா வசிய மருந்துகள் மற்றும் மருத்துவசேவை கிடைக்கவில்லை. ஆனால் இந்தியா உலகத்தில் மருந்து உற்பத்தியில் 3வது இடத்தை பிடித்துள்ளது. 200 நாடுகளுக்கு மருந்து, மருத்துவ சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கத்தால் வளர்க்கப்பட்ட மருந்து துறையில் ஆட்சியாளர்கள் 100சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு மக்களின் நலனை ஆட்சியாளர்கள் அடகு வைத்துள்ளனர். நமது நாட்டு மருந்து நிறுவனங்களான சுஹசூக்ஷஹஓலு, னுஹக்ஷருசு, ஞஐசுஹஆஹடு, ஞஹசுஹளு, ஊகுடு, ருசூஐஏநுசுளுஹடு, ஆநுனுஐஊஹசு, ளுஹசூகூழஹ க்ஷஐடீ கூநுஊழ போன்ற நிறுவனங் களை பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் கபளிகரம் செய்துள்ளது. இதன் விளைவாக மருந்து துறையில் ஏகபோகம் ஏற்பட்டு மருந்து விலைகள் மற்றும் மருத்துவசேவை கட்ட ணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.சாதாரண மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு உள்ளே சென்றால் உயிர் பிழைத்து வருவதென்பது அரிது.
தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் தனது உடமை களை விற்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்றசூழல் உள்ளது. தனது தினக்கூலி, மாத சம்பளம் நம்பிவாழும் முறைசாராத் தொழிலாளி, நடுத்தரக் குடும்பத் தினருக்கு புற்றுநோயோ அல்லது ஈரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களது நிலைமை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இந்த நோய்களுக்கான சிகிச்சையின் செலவு என்பது பல லட்சங்களாகும். புற்றுநோய் சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்திலிருந்து 3லட்சம் ஆகும். ஈரல் அழற்சி நோயிக்கான மருந்துகளின் செலவு மட்டுமே ரூ.3.60லட்சமாகும். இப்படி மருத்துவ செலவிற்கு மட்டுமே அதிக அளவில் செலவு செய்யவேண்டிய நிலையில் மக்களைஅரசு தள்ளிவிட் டுள்ளது.
மோடி தலைமையிலான புதிய அரசு அமெரிக்க கொள்கைகளை பின்பற்றாமல் சீனா, ஜெர்மனி, இலங்கை, மலேசியா, பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் சுகாதாரக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.ஜெர்மனி அரசு தனது நாட்டு மக்கள் தொகை யில் 99 சதவீதமான மக்களுக்கு சமூக நலன் காப் பீடு திட்டத்தில் இணைத்து அனைவருக்கும் இலவசமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் சீன அரசு மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து அடிப்படை வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், சீரான சத்துணவு, பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவு, சுகாதார நன்முறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது போன்றவற்றை தனது மக்களுக்கு இலவசமாக செய்து வருகிறது.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஏற்கனவேமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது போன்று உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3சதவீதம் சுகா தார மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கிட வேண்டும். அதுமட்டுமல்ல ஏற்கெனவே திட்டக்குழு 12வது திட்ட காலத்திற்கு 10.8 லட்சம் கோடி ஒதுக்கிட வேண்டுமென்று பரிந்துரைத்தது. அதில் கடந்தஆட்சியாளர்கள் 40 சதவீதம் கூட ஒதுக்கவில்லை. மோடி அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் விரோதக் கொள்கைகளை தவிர்த்து,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வெஞ்சாமரம் வீசாமல் மக்கள் நலன்களை பாதுகாக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!