Thursday, September 26, 2013

கொலை சதி எதிரொலி : வெனிசுலா ஜனாதிபதியின் அமெரிக்க பயணம் ரத்து


கராகஸ், செப். 26-
கொலை சதி தெரியவந்ததால் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ ஐ.நா கூட்டத்திற்காக அமெரிக்க செல்லவிருந்த தனது பயணத்தை ரத்து செய்தார்.அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை இயங்கி வருகிறது. இங்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கலந்து கொள்வதாக இருந்தது. சீன பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் அவர் அமெரிக்கா செல்வதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் அமெரிக்க பயணத்தின் போது மதுரோவை கொல்ல செய்யப்பட்ட சதிதிட்டம் வெளியாது. இது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அமெரிக்க பயணத்தை மதுரோ ரத்து செய்தார்.
பின்னர் சீன பயணத்தை முடித்துக் கொண்டு புதனன்று நேராக வெனிசுலா திரும்பினார்.இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தேன். ஆனால் கனடாவில் உள்ள வான்கோர் நகரில் இருந்து ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் அமெரிக்கா செல்லும் என்னை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பல வழிகளில் அதை ஆய்வு செய்தபோது, அந்த சதி உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எனது பாதுகாப்பை கருதி அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்த மாதம் தொடக்கத்தில் மதுரோ செய்தியாளர்களிடம் கூறும்போது, வென்சுலாவின் எண்ணெய் உற்பத்தி, உணவு உற்பத்தி மின்சாரம் ஆகியவற்றை வீழ்த்தி வெனிசுலாவை அழிக்க அமெரிக்கா சதி செய்வதாக குறிப்பிட்டது இங்கே நினைவு கூறதக்கது.கடந்த ஆகஸ்ட் மாதம் வெனிசுலா உள்த்துறை அமைச்சர் மிகுல் ரோட்ரிக்ஸ் கூறும்போது, ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை கொல்ல விக்டர் ஜோன், எரிக் லினர்டோ உள்பட 10 பேர் கொண்ட கொலைக் கும்பலை கொலம்பியா முன்னாள் ஜனாதிபதி ஆல்வரோ உர்பி அனுப்பி இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். ராணுவத்தை அனுப்பி என்னை கொல்ல கொலம்பியா முன்னாள் ஜனாதிபதி ஆல்வரோ திட்டமிட்டுள்ளார் என்று மதுரோ கடந்த மார்ச் மாதம் குற்றஞ்சாட்டி இருந்தார்

No comments:

Post a Comment