வெனிசுலா நாட்டின் மகத்தான மக்கள் தலைவராக கருதப்படுபவர் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ். வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளங்கள் அனைத்தையும் அரசுடமையாக்கியதுடன், அதுநாள் வரை கொள்ளை லாபத்தில் கொழுத்துக் கொண்டிருந்த தனியார் பெருநிறுவனங்களை அதிகப்படியான வரிவிதிப்பிற்கு உள்ளாக்கினார். இதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தினார். மேலும், வெனிசுலா நாட்டை “பொலிவாரிய சோசலிச குடியரசு” என பிரகடனப்படுத்தியதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் முதன்மையாக செயல்பட்டு வந்தார்.
இச்சூழலில் கடந்தாண்டு மார்ச் மாதம் 5ம் தேதியன்று புற்றுநோயின் காரணமாக சாவேஸ் உயிரிழந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹியூகோ சாவேசின் மரணம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இதன்பின் அந்நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது மரணத்திற்கு முன்பே சாவேசால் முன் மொழியப்பட்டவரான நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றார். மேலும், சாவேசால் முன்வைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் மதுரோ தலைமையிலான புதிய அரசு முன்னெடுத்து சென்று வருகிறது.
No comments:
Post a Comment