பினராயி விஜயன்
யாத்திரைக்காக பல மையங்களில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் அல் லது தயாரிப்பு மற்றும் பிரச்சாரக் கூட்டங்கள் என்று இவர்களின் பங்கேற்பு பல நிலைகளில் இருந்தது. யாத்திரை யின்போது லட்சக்கணக்கான மக்கள் சாலைகளின் இருமருங்கிலும் நின்று பூமழை பொழிந்தனர்.
ஒரு புதிய அரசி யல் விழிப்புணர்வைத் தூண்டும் வகை யில் இருந்த இந்த யாத்திரையின் அனு பவம் என்னவென்றால், கேரளாவின் பலதரப்பட்ட மக்கள் தயக்கமின்றி இடதுசாரி இயக்கத்திற்கு, குறிப்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்கிறார்கள் என்ற உண்மையை உறுதிப்படுத்தியதுதான். மாநிலத் தில் கட்சியின் வலுவான வெகுஜனத் தளத்தையும் இது பிரதிபலித்தது.140 தொகுதிகளிலும் பயணித்த இந்த யாத்திரைக்கு கேரளாவில் உள்ள அனைத்து 14 மாவட்டங்களிலும் 126 மையங்களில் பெரும்அளவிலான வரவேற்பு வழங்கப்பட்டது. யாத்திரை ஐந்து பிரதான கோரிக்கை களை முன்வைத்தது.விலைவாசியைக் கட்டுப்படுத்து.பொது விநியோக முறையைப் பலப்படுத்து.மதவெறியைத் தடுத்து நிறுத்து.
பல கோடி சூரிய மின்தகடு ஊழலில் சிக்கியுள்ள முதல்வர் உம்மண் சாண்டி பதவி விலக வேண்டும்.ஊழலைக் கட்டுப்படுத்து.யாத்திரையின் அனைத்து நாட் களிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் ஏ.விஜயராகவன், இ.பி.ஜெயராஜன், பி.கே.ஸ்ரீமதி, ஏ.கே.பாலன், எம்.வி. கோவிந்தன், இளமாரம் கரீம் மற்றும் பேபி ஜான் ஆகியோர் பயணித்தனர். யாத்திரையின் மேலாளராக ஏ.கே.பாலன் பணியாற்றினார்.
தேச அளவில் முக்கியத்துவம்
பாஜகவின் மதவெறி மற்றும் காங்கிரசின் நவீன தாராளமயக் கொள்கை களுக்கு எதிராகப் போராடி, அவற்றைத் தோற்கடிக்கும் நோக்கத்துடன் காங் கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் தலைநகர் புதுதில்லியில் கூடிய தற்கு அடுத்த நாள் யாத்திரையின் நிறைவுநிகழ்ச்சி கோழிக்கோட்டில் நடை பெற்றது. காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்க முன் முயற்சி எடுத்த கட்சி என்ற முறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த யாத்திரைக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைத்தது. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு உண்மையான மாற்றை உருவாக்க கட்சி தொடர்ந்து முயற்சி எடுத்து வந்ததன் பின்னணியில் யாத்திரையின் செய்தியும் பரந்து விரிந்து எடுத்துச் செல்லப்பட்டது.கடந்த இருபது ஆண்டுகளில், மாநிலத்தின் விவசாயத்துறை, நவீன தாராளமயக் கொள்கைகளால் நிர்மூலமாக்கப்பட்டது. விலையுயர்வு, வேலையின்மை, உற்பத்தி சரிவு மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மக்களின் வாழ்வை பரிதாப நிலைக்குத் தள்ளிவிட்டன. வரும் மக்களவைத் தேர்தலில் இந்தப் பிரச்சனைகள் எழுப்பப் படும் என்பது இயற்கையே. மத்திய, மாநில அரசுகள் கடுமையான விமர் சனத்தை எதிர்கொள்ள நேரிடும்.
திரண்டு வந்த பெண்கள்
யாத்திரையை வாழ்த்த பெண்கள் திரண்டு வந்தது பெரும் உற்சாகத்தை அளித்தது. தங்கள் குழந்தைகளோடு திரண்டு வந்த பெண்கள், மாணவிகள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்தவர்கள் திரண்டனர். வடக்கு மாவட்டங்களில் ஏராள மான இஸ்லாமியப் பெண்கள் திரண்டு நின்று யாத்திரையை வாழ்த்தினர். மற்ற மாவட்டங்களிலும் பெண்கள் உற்சாகத்துடன் வந்து நின்றுபங்கேற்றனர். பெண்கள் பிரச்சனை களில், சரியான அரசியல் பார்வையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டது என்பதை இந்தப் பெரும் அளவிலான பெண்கள் பங்கேற்பு காட்டியது. நவீன தாராளமயக் கொள்கைகளால் அதிக மாகப் பாதிப்படைந்தது பெண்கள்தான் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்வது நல்லது.
மனநிறைவான வரவேற்பு இந்த யாத்திரைக்குக் கிடைத்தது என்பது, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் மைய நீரோட்ட ஊடகம் என்று சொல் லிக் கொள்ளும் ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் நம்பவில்லை என்பதையே காட்டுகிறது. 126 மையங்களிலும் லட்சோப லட்சம் மக்கள் திரண்டு வந்து பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களைத் தாண்டி, பல்வேறு சமூக, மத மற்றும் அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். பொது மக்களோடு இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மத குருமார்களும் பங்கேற்றனர். விவசாயிகள், தொழிலாளர் கள், மாணவர்கள், இளைஞர்கள், எழுத்தாளர்கள், கலாச்சாரத்துறை ஊழியர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மற்றும் பிற இடதுசாரிக் கட்சிகள் வலுவாக இல்லாத பகுதிகளில் கூட வலுவான சமிக் ஞைகள் யாத்திரைக்குக் கிடைத்தன.
மக்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதி களிலும் கட்சி அமைப்பு வேர் விட்டு நிற்பதையே இது காட்டியது.1947-49, 1963-65 மற்றும் 1975-77 ஆகிய காலகட்டங்களில் கம்யூ னிச இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பிற வலதுசாரியினர் தங்களால் முடிந்த வரைக்கும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியையே தழுவின. எனினும், தற் போதைய உலகமய காலகட்டத்தில், அதே சக்திகள் தங்கள் முயற்சியை மீண்டும் சில பெரு நிறுவனங்களின் உதவியோடு முடுக்கி விட்டுள்ளன. தங்கு தடையற்ற மூலதனக் குவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடையாக இருக்கும் என்று பார்ப்பதால் இந்த முயற்சி நடக்கிறது.
2009 மக்களவைத் தேர்தல் மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் இடதுசாரிகளுக்குக் கிடைத்த தோல்வி அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. ஆனால், நாட்டி லுள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் கட்சியின் முயற்சி, இந்த வலதுசாரிகளை கடுப் பேற்றியுள்ளது. தேசிய அரசியலில் பிரதான கவனத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பிடித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என்பதையே கேரள பாது காப்பு யாத்திரையின் வரலாறு காணாத வெற்றி எடுத்துக் காட்டுகிறது.
தகர்ந்தன பொய்கள்
கேரளாவைப் பொறுத்தவரை, அனைத்துத் தரப்பினரின் விமர் சனத்தைத் தாங்க முடியாமல் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு தவிக்கிறது. டி.பி.சந்திரசேகரின் வழக்கை மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்து செல்லும் உத்தியைக் கையாளுகிறார்கள். இதேஉத்தியை மைய நீரோட்ட ஊடகம் என்றுசொல்லிக் கொள்பவர்களும் எடுத் துச் செல்கிறார்கள். கடந்த 12 ஆண்டு களாக, லாவ்லின் வழக்கு என்ற பெயரில் பொய்ப்பிரச்சாரம் நடந்தது. மத்தி யப் புலனாய்வுக்குழுவின் உதவியும் கிடைக்கும் என்று நம்பினர்.
இதே ஊடகங் கள்தான் தற்போது சந்திரசேகரன் விவகாரத்தைக் கிளப்புகின்றன. இதன்மூலம், காங்கிரசின் காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகளை மூடி மறைக்கின்றன. காங்கிரஸ் குண்டர்களின் கொலைகளால் ரத்தம் தோய்ந்தவரலாறு கேரளத்தில் உண்டு.நூற்றுக்கணக்கான கம்யூனிசத்தலை வர்கள் காங்கிரஸ்காரர்களால் கொல் லப்பட்டுள்ளனர். மோயர்த் சங்கரன், சர்தார் கோபாலகிருஷ்ணன், குஞ்சாலி, அழிக்கோடன் மற்றும் அப்துல் காதர் என்று சில பெயர்களையும் குறிப்பிடலாம். ஏராளமான மாணவர் சங்கத்தலைவர்கள் தியாகிகளாகியுள்ளனர்.
சீமெனியில் ஐந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் காங்கிரஸ் குண்டர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்கள். இவர்கள்தான், சந்திரசேகரன் விவகாரத்தில் கட்சி மீது தாக்குதல் நடத்துகின்றனர். இத்தனைக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது.இருப்பினும், இத்தனைப் பொய்ப் பிரச்சாரத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், கோழிக்கோடு கடற்கரையில் கடல்தான் உள்ளே வந்துவிட்டதோ என்று நினைக்கும் வகையில் மக்கள் கூட்டம் பிப்ரவரி 26 அன்று திரண்டது. கேரளாவின் வரலாற்றில் இப்படிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி இதுவரையில் நடந்ததில்லை என்று பெருமையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறிக் கொள்ளலாம். இவ்வளவு எண்ணிக்கையிலான மக்களிடம் தொடர்பு கொண்ட மக்கள் நிகழ் வை மாநிலம் கண்டதில்லை.
புதிய சக்தி
மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதோடு, பதவி ஆசையைத் தீர்த்துக் கொள்ள மதவெறி சக்திகளோடு எப்போதும் சமரசத்தையும் காங்கிரஸ் கட்சி மேற்கொள்கிறது. அந்த சமரசத் தின் விளைவே தற்போதுள்ள மத வெறி அபாயமாகும். இந்த நிலையில்,வரும் மக்களவைத் தேர்தலில் காங் கிரசை நிராகரித்து, பாஜகவைத் தோற் கடிக்குமாறு மக்கள் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத் துள்ளது. அதோடு, இவை தொடர்பாக தனது சொந்தக் கருத்துக்களை யாத்திரையின் முழக்கங்களாகவும் முன் வைத்தது. மக்களின் திரளான மற்றும் உற்சாகமான பங்கேற்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பிய முழக்கங்களைஅவர்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறார் கள் என்பதையே காட்டுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான கொள்கைகள் மீது பொய்ப்பிரச்சாரம் மற்றும் சதிவேலைகள் மூலமாக தாக்குதல் நடத்தும் சந்தர்ப் பவாதக் கூட்டணிக்கு பதிலளிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி இந்த யாத்திரைக்குக் கிடைத்துள்ளது. யாத்திரையின் பாதையில் பங்கேற்ற லட்சோப லட்ச மக்கள், செங்கொடி யோடுதான் கேரளம் நிற்கும் என்றும், பிற்போக்கு சக்திகளின் பொய்யான குற்றச்சாட்டுகளோடு நிற்காது என்றும் அறிவித்துள்ளனர். இந்த யாத்தி ரையின் வெற்றியானது, கேரள மக்களின் வெற்றி யாகும். இந்த மகத்தான யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி நடத்தப் போகும் வருங்காலப் போராட்டங்களுக்கு புதிய சக்தியையும், உற்சாகத்தையும் இந்த யாத்திரையின் அனுபவம் அளித்திருக்கிறது.
- தமிழில் - கணேஷ்
நன்றி - பீப்பிள்ஸ் டெமாக்ரசி (மார்ச் 3-9, 2014)
No comments:
Post a Comment