இவர்களின் முதலீடு மக்களின் மகத்தான ஞாபகமறதிதான் முதலாளித்துவ, மதவெறி வலதுசாரிகளின் முதலாக இருப்பதால் மக்களின் ஞாபக சக்தியை தூண்டிவிட வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.மோடி ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள நிலங்களை அடிமாட்டு விலைக்கு அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் வாரி வழங்குகிறார் என்று ராகுல் காந்தி அண்மையில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. நானோ கார்களை சாலைகளில் பார்த்தீர்களா என்று அவர் குற்றம் சாட்டிய போது கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தார்கள். குஜராத்தில் வறுமைக்கோட்டின் அளவுகோல் வெறும் ரூ.11 தான். ஆனாலும் குஜராத் மிளிர்கிறது என்று மோடி பீற்றுகிறார் என ராகுல் காந்தி கூறினார். குஜராத்தில் முதலீடு செய்துள்ள 10-15 தொழிலதிபர்களுக்கு மட்டும் குஜராத் மிளிர்கிறது. அவர்களுடைய அரண்மனை போன்ற மாளிகைகள், சொகுசு கார்கள், விமானங்கள் ஆகியவை மிளிர்கின்றன.
சாதாரண குஜராத் குடிமகனின் வாழ்க்கை மிளிரவில்லை என்றுராகுல் முதலைக்கண்ணீர் விட்டார். இந்தியாவின் காவலாளி என்று மோடி தன்னை வர்ணித்துக் கொண்டதை ராகுல் கிண்டலடித்தார். இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருப்போம் என்று பிரிட்டிஷார் கூறிக்கொண்டார்கள். அவர்களை நாம் விரட்டி விட்டோம். எந்தவொரு தனிநபரையும் காவலாளியாக வைத்துக்கொள்ளும் அவசியம் இந்தியாவுக்கு இல்லை. ஒவ்வொரு இந்தியரும் அதன் காவலாளிகள் ஆகும் வண்ணம் அனைவருக்கும் அதிகாரம் அளிப்போம் என்று ராகுல் கூறியுள்ளார். இந்தியாவை ஒரு சிறிய காலம் தவிர, தனியாகவோ, கூட்டணியாகவோ நீண்ட காலமாக ஆண்டுவரும் கட்சி காங்கிரஸ் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த காலங்களில் எந்தவொரு இந்தியரும் அதிகாரம் படைத்தவர்களாக உயரவில்லை. மாறாக செல்வந்தர்களும், தொழில் நிறுவனர்களும், முதலாளிகளும், அவர்களின் ஆதரவில் ஆட்சி நடத்தும் சில அரசியல் கட்சித்தலைவர்களும் அதிகாரம் படைத்தவர்களாக மாறியுள்ளனர் என்பதை ராகுல் காந்திக்கு யாராவது எடுத்துக் கூற வேண்டும். மக்களிடம் உரையாற்றுவோரை விட மக்களின் பேச்சுக்கு காதைத் தருவோர்தான் உண்மையான தலைவர் என்று தலைமைக்கு ராகுல் இலக்கணம் அளித்தார்.
மகாத்மா காந்தி இது போன்றதொரு தலைவர். ஆனால் இட்லர் போன்றவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல் நடந்து கொள்வதுடன் அதிகாரபோதை கொண்டு அலைகிறார்கள் என்றும் மற்றவர்களை முட்டாள்கள் என்றும் கருதுகிறார்கள் என அவர் சொன்னார். ஒரு காலகட்டத்தில் அகமதாபாத்தில் சர்தார் படேல் விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று அவருக்கு சிலை வைக்கப் போவதாக கூறுகிறார்கள் என்றும் அவர் கிண்டலடித்தார். இந்திய ஆத்மாவை அழிக்கும் நச்சுத்தன்மை கொண்டது ஆர்.எஸ்.எஸ் என்று படேல் அன்று வர்ணித்தார். குஜராத் அமைச்சரவையில் மூன்றுகறை படிந்த அமைச்சர்கள் தொடர்வது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். குஜராத்தில் லோக் ஆயுக்தா, தகவல் அறியும் உரிமை ஆணையர்கள் இல்லாமை ஆகியவை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்தியாவில் ஊழலுக்கு புதிய விளக்கம் அளித்த கட்சி காங்கிரஸ் என்பதை அவர் மறந்து விட்டார்.
காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் என்று பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்யமுடியும் என்பதை செய்முறையில் நிரூபித்துக் காட்டியது காங்கிரஸ் கட்சியினர்தான் என்பதை ராகுல் மறந்து விட்டாரா? வறுமைக்கோட்டு அளவு குறித்துகாங்கிரஸ் அரசும் அமைச்சர்களும் நடத்திய லாவணி அண்மைக்கால நிகழ்வு. இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போல் இதுவும் இந்திய வரலாற்றில் இடம்பெற்று விடும். இட்லர் போன்று மோடியும்ஒரு பாசிசவாதிதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் காங்கிரசும் அதற்கு குறைந்ததில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற புதிதில் கம்யூனிஸ்ட்டுகளை தடை செய்ததும், மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்டதிலும், 1984 சீக்கிய கலவரத்திலும் காங்கிரசின் பங்கு குறித்து யாராவது ராகுலுக்கு பாடம் எடுக்க வேண்டும். மதவெறியாளர்களுக்கு மக்களாட்சி ஒரு வேண்டாத பொருளாகும்.. எனவேதான் அவர்கள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய நபரை பிரதம வேட்பாளர் என்றுஅறிவித்து நாடகமாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் காங்கிரசின் வரலாற்றில் அவசரநிலை காலம் என்று ஒன்று நீடித்திருக்குமா? அல்லது அழிக்கப்படுமா என்பதற்கு வரலாறுதான் பதில் சொல்லும்.மோடியின் காலத்தில் அம்பானிகளும், அதானிகளும் வளர்க்கப்படுகிறார்கள் என்பது நிகழ்காலம். காங்கிரசின் காலங்களில் பிர்லாக்களும், டாடாக்களும், முந்திராக்களும், பஜாஜ்களும் ஊட்டி வளர்க்கப்பட்டனர் என்பது கடந்த காலம். இன்றும் கூட அவர்கள் காங்கிரசால் பயனடைந்து வருகிறார்கள்என்பதால் கடந்த காலம் என்று குறிப்பிடுவதுகூட பொருத்தமற்றது. பாஜக சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது போல் காங்கிரசு போட்டியிட்டதும் உண்மைதான். எனவேதான் ராகுல் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியக்கூடாது.
No comments:
Post a Comment