பாஜக என்பது சிறுபான்மை கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல இந்துமதத்தில் உள்ள பெரும்பகுதி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரி என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆவணங்களை படித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. இவர்களுடைய கடந்த கால நடவடிக்கைகளைப் பார்த்தாலே போதும்.இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் இருந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்ற முயன்றபோது இவரது கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ரதயாத்திரை நடத்தி அந்த ஆட்சியையே கவிழ்த்தார் என்பது வரலாறு. ஆனால் இவரே பிற்படுத்தப்பட்டோருக்காக அவதாரம் எடுத்தவர் போல காட்டிக் கொள்கிறார்.தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பறிக்க சதி நடக்கிறது என்றும் மோடி பேசியுள்ளார். இவரது கட்சியைச் சேர்ந்த அறிவுஜீவி என்று கூறிக்கொள்ளும் அருண்ஷோரி என்பவர்தான் அம்பேத்கர் மீது புழுதிவாரித் தூற்றி புத்தகம் எழுதினார். இன்றுவரை அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதே அருண்ஷோரி எழுதிய புத்தகத்தைத்தான் அண்மையில் மோடி சென்னையில் வெளியிட்டார்.
இவர்களுடைய வழிகாட்டி அம்பேத்கர் அல்ல. மாறாக மனுவை மனதுக்குள் போற்றும் கோல்வால்க்கர் போன்ற வர்கள்தான். இதை மோடி மறைத்துவிட முடியாது.மக்கள் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராட வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார். ஆனால் மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கைக்கு எதிராக மசோதா கொண்டுவர வேண்டும் என்று போராடிய பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை வெட்டிவீழ்த்தியது இந்துத்துவா ஆதரவு கும்பல்தான். அவர்களுக்கு ஆர்எஸ் எஸ் அமைப்போடு தொடர்பு உண்டு. மூடநம்பிக் கைகளை வளர்ப்பதன் மூலமே அதிகாரத்தைப் பிடிக்கவும், தக்க வைக்கவும் முடியும் என்ற சித்தாந்தமே பாஜகவின் கோட்பாடு ஆகும்.குஜராத் மாநிலத்தில் மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமை நீடிப்பது குறித்து கேட்டதற்கு அந்தப் பணி ஆண்டவனுக்குச் செய்யும் அருட்பணி என்று திருவாய் மலர்ந்தவர்தான் மோடி. இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தலித் மக்களுக்காக உருகுவதுபோல காட்டிக் கொள்கிறார். அடுத்து வரும் பத்தாண்டுகள் மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக இருக்க வேண்டு மானால் மோடியின் கனவு தகர்க்கப்பட வேண்டு
No comments:
Post a Comment