வங்கிகள் வேலை நிறுத்தம் ஏன்?
எஸ்.வி.வேணுகோபாலன்
நாடு
முழுவதுமுள்ள 80,000 வங்கிக் கிளைகள் நேற்று முழுமையாக மூடப் பட்டிருந்தன.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டு பொதுத் துறை வங்கிகள் மற்றும் பழைய தலைமுறை
தனியார் வங்கிகளில் பணியாற்றும் 10 லட்சம் ஊழியர்களும், அதிகாரிகளும்
தொடங்கிய 2 நாள் வேலை நிறுத்தம் இன்றும்(பிப்.11) தொடர்கிறது. சொல்லப்
போனால், இந்த முறை 48 மணி நேர வேலைநிறுத்தம் என்றுதான் இது
வருணிக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், காசோலைகளை பரிவர்த்தனை
செய்யும் மையங்களில் வேலை நிறுத்தம் நேற்று காலை 6 மணிக்கே தொடங்கி
விட்டது. இதன் காரணமாக புதன்கிழமை காலை 6 மணிக்குத் தான் காசோலை மையங்களில்
கிளியரிங் வேலை தொடங்கும். அது மட்டுமின்றி, ஒரு லட்சம் கிராம வங்கி
ஊழியர்களும், அதிகாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்
என்பதும் கவனிக்கத்தக்க செய்தி.
எதற்காக இந்த வேலைநிறுத்தம்? இதை தவிர்த்திருக்க முடியாதா? என்ற கேள்விகளை இணையதளத்திலும், பொது இடங்களிலும் சந்திக்கிறோம். ஊதிய உயர்வுக்கான போராட்டத்தினால், சாதாரண மக்கள் ஏன் வங்கிச் சேவையை இழக்க வேண்டும் என்றும் கேட்கப்படுகிறது. வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கான ஒன்பதாவது ஊதிய ஒப்பந்தம் அக்டோபர் 31, 2012 தேதியுடன் முடிவுக்கு வந்தது. அடுத்த ஒப்பந்தத்திற்கான கோரிக்கைகளை நேரத்தே சமர்ப்பித்தது வங்கி ஊழியர் - அதிகாரிகளின் கூட்டுப் போராட்ட ஐக்கிய மேடை. ஆனால், ஓராண்டுக்காலம் வரை நடந்த ஐந்தே ஐந்து சந்திப்புகளில், கடைசிவரை ஊதிய உயர்வு எந்த விகிதத்தில், என்ன அடிப்படையில் வழங்க உத்தேசிக்கிறோம் என்பதை இந்திய வங்கிகள் கழகம் தெரிவிக்கவே இல்லை. அது மட்டுமல்ல, அவர்கள் தரப்பில் முன் வைத்திருக்கும் எதிர் கோரிக்கைகளைப் பேசாமல் மேற்கொண்டு எதுவும் நகராது என்றும் பிடிவாதம் பிடித்தனர் நிர்வாகத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவினர். அந்த எதிர்க் கோரிக்கைகளின் தன்மை மிக மிக மோசமான முறையில் ஊழியர்களைப் பிரித்தாளும் நோக்குடனும், ஒன்பது சங்கங்கள் கூட்டாக ஒருமித்த குரலோடு போராடும் வண்ணம் வளர்த்தெடுத்திருக்கும் ஒற்றுமையை சவாலுக்கு இழுப்பதுமாகும். 30 ஆண்டு பணிக்காலம் முடித்தோர் அல்லது 55 வயதை நிறைவு செய்தோரை பணிநீக்கம் செய்யும் உரிமை, யாரையும் எங்கும் கிளை மாற்றல் செய்யும் அதிகாரம், வங்கி வாரி தனித் தனி ஒப்பந்தம், செலவினங்களை அதிகம் பணியாளர் தலையில் சுமத்துவது போன்ற விஷயங்களை ஒப்புக்கொள்ளுங்கள் என்று கேட்கின்றது நிர்வாகக் குழு. இவற்றை முற்றாக நிராகரித்த கூட்டுப் போராட்ட மேடை, வங்கித்துறை சீர்திருத்தங்களை அமல்படுத்துவதை எதிர்த்தும் இந்தப் போராட்டத்தை நடத்துகிறது.
2013 நவம்பர் வரையிலும் எந்தப் பிடியும் கொடுக்காமல் நிர்வாகக் குழு இழுத்தடிக்கும் போக்கைத் தொடர்ந்தது. எனவே, டிசம்பர் 18 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு கூட்டுப் போராட்டக் குழு அறைகூவல் விடுத்தது. போராட்ட தினம் நெருங்கும் நேரத்தில் வங்கி நிர்வாகங்களின் குழு 5 சதவீத உயர்வு தருவதாக அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டாம் என்று சொன்னது ஊழியர், அதிகாரிகளை மிகுந்த கோபாவேசத்திற்கு உட்படுத்தியது. அந்த வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றது. அதன் பிறகும் நிர்வாகக் குழுவின் போக்கில் முன்னேற்றம் அற்றுப் போகவே, ஜனவரி 20, 21 இரண்டு நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதென சங்கங்கள் முடிவெடுத்தன. நிர்வாகத் தரப்பு தனது புறக்கணிப்பு மனப்பான்மையை மேலும் வெளிப்படுத்துவது போல, பேச்சுவார்த்தை தேதியை ஜனவரி 29 என்று அறிவித்து மேலும் அவமதித்தது. மத்திய தொழில் ஆணையர் அழைத்து அறிவுறுத்திய பின்னர், ஜனவரி 17 அன்று பேச்சுவார்த்தையை நடத்திய இந்திய வங்கிகள் கழகம், 9.5 சதவீதம் தருவதாக அறிவித்தது. அதை பேச்சுவார்த்தை தொடக்கப் புள்ளியாக வைத்துக் கொண்டு, மேற்கொண்டு உயர்வு தர ஒப்புக் கொண்டால் பேச்சுவார்த்தை தொடரலாம் என்ற பரஸ்பர ஒப்புதலில் ஜனவரி இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை சங்கங்கள் ஒத்தி வைத்தன.
ஆனால், மீண்டும் அடுத்த சந்திப்பில் மேற்கொண்டு அரை சதவீதத்திற்கு மேல், அதாவது 10 சதவீத உயர்வுக்குமேல் தர இயலாது என்று நிலையெடுத்தது நிர்வாகத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழு. அதோடு மட்டுமின்றி, தங்களது எதிர்க் கோரிக்கைகள்மீது உடன்பாடு எட்டாமல் மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை என்றும் நிலையெடுத்தது. இந்தப் பின்னணியில்தான் பிப்ரவரி 10, 11 இரண்டு நாள் வேலைநிறுத்தம் நடத்துவதென மேற்படி சந்திப்பு நிகழ்ந்த ஜனவரி 27 அன்றே கூட்டுப் போராட்டக் குழு அறைகூவல் விடுத்தது. இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் ஊழியர் அதிகாரிகளின் நூறு சதவீத பங்கேற்பு அவர்களது கோரிக்கையின் நியாயத்தையும், போராட்ட உறுதியையும், ஒன்றுபட்ட இயக்கத்தின் வலுவையும் பிரதிபலிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் கண்மூடித் தனமாக வங்கிக் கிளைகளை மூடிக் கொண்டிருந்த நிர்வாகங்கள், அதற்கு எதிரான தொழிற்சங்கக் குரல்களை மதிக்கவில்லை. 15 ஆண்டுகளில் 4750 கிராமப்புற வங்கிக் கிளைகள் மூடப்பட்டன என்று பத்திரிகையாளர் பி. சாய் நாத் 2008ம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இப்போதோ, ஒவ்வொரு வங்கியும் போட்டி போட்டுக் கொண்டு நூற்றுக் கணக்கில் கிளைகளைத் திறக்கின்றன. பெரும்பாலானவை பெருநகர, நகரக் கிளைகள் தான் என்றாலும், இவற்றுக்கான ஊழியர்களை அருகிலிருக்கும் கிளைகளிலிருந்து எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றன நிர்வாகங்கள். தனி நபர் வர்த்தக அளவு, தனி நபர் லாபப் பெருக்கம் எல்லாம் பல மடங்கு உயர்ந்தபின்னும், பெருகும் கிளைகளின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்தில் ஊழியர் எண்ணிக்கை குறைந்து கொண்டும் இருக்கிறது. வேலைப்பளு பல மடங்கு கூடி வருவதால், கிளைகளில் வாடிக்கையாளர் சேவை படுமோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அன்றாடத் தள்ளுமுள்ளுகள் தவிர்க்க முடியாது போய்க் கொண்டிருக்கின்றன. 5 லட்சம் காலி இடங்களை நிரப்பத் தயாராக இல்லாத வங்கி நிர்வாகங்களுக்கு, பணியில் இருக்கும் ஊழியர்களைப் பந்தாடி மகிழ்வதும், பழிவாங்கத் துடிப்பதுமே பொழுது போக்காகி வருகிறது. சந்தைப் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்ட ஆட்சியாளர்கள், பொதுத் துறை வங்கிகளையும் லாப நோக்கை முன்னிறுத்தும் வண்ணம் நிர்ப்பந்திக்கின்றனர். சாதாரண மக்கள் சேவைக்கு இருப்பதைவிடவும் பெருந்தொழில் வர்த்தக சேவைக்கே இனி முன்னுரிமை.
இத்தனைக்கும் இன்று வங்கிகள் ஈட்டும் லாபத்தின் பெரும்பங்கை அரித்துக் கொண்டிருப்பவை மேற்படி கனவான்கள் கும்பல்களுக்கு வாரி வாரி அளித்த கடன்கள் திரும்ப வராது போனதால் வாராக் கடன்கள் என இலக்கிய நயமாகப் பேசப்படும் நிலுவைக் கணக்குகள் தான். அவர்கள்பால் இரக்கத்தோடு தள்ளுபடி பேரத்தை நடத்தியும் திருப்தியுறாத ஆட்சியாளர்கள், இத்தகு நிறுவனங்களுக்கே புதிய வங்கிகளை நடத்தும் உரிமம் வழங்கவும் துடிப்பது அராஜகமானது. இடதுசாரிகள் எதிர்ப்பையும், தொழிற் சங்கப் போராட்டங்களையும் மீறி தனியார் மயத்தை ஊக்கப் படுத்தவும், பொதுத் துறை வங்கிகளை வலுவிழக்கச் செய்யவுமான சீர்திருத்தங்கள் சட்டமாக இயற்றப் பட்டு விட்டன. இவற்றை நடைமுறைப் படுத்த விடாது எதிர்த்துப் போராடும் தொழிற்சங்க போராட்டங்களை முடக்கும் நோக்கோடுதான் வங்கி வாரி ஒப்பந்தம் உள்ளிட்ட எதிர் கோரிக்கைகளை இந்திய வங்கிகள் கழகம் முன்னிறுத்துகிறது. போராட்ட ஒற்றுமையை உடைக்கும் நோக்கோடு வேறு சில முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டக் கோரிக்கைகளின் அடிநாதம் என்று பார்த்தால் நியாயமான ஊதிய உயர்வு, ஆரோக்கியமான வேலைச் சூழல், பொதுத் துறை பாதுகாப்பு என்று சொல்லலாம். இந்தக் கோரிக்கைகளின்பால் சீரிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லாத நிர்வாக அமைப்புதான் குற்றவாளியே தவிர, தொழிற்சங்கங்கள் வேண்டுமென்று போராட்டத்தில் குதிக்கவில்லை. பேச்சு வார்த்தையின் போக்கை தீர்மானிப்பதில் மத்திய அரசுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் பெரும் பங்கு உண்டு. ‘வங்கித் துறை வேலைகள் அத்தனை வசீகரமாக இருக்க வேண்டியதில்லை, ஊதிய நிலைமை மேம்படுத்தித் தரவேண்டியதில்லை, ஆட்குறைப்புக்கும் அது வசதிப்படும்‘ என்ற உள்நோக்கம் அவர்களுக்கு இருப்பதாகக் கருத இடம் உண்டு. அதனாலும் கூட இந்தப் போராட்டங்கள் தவிர்க்க முடியாததாகிறது.வங்கித்துறை உள்ளிட்ட நிதித் துறையைச் சீரழிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கும், இதே பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்த பாஜக தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் இந்தக் கருத்தில் நிச்சயம் வேறுபாடு கிடையாது.
அதாவது காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் நவீன தாராளமயக் கொள்கையில் கிஞ்சிற்றும் வித்தியாசம் கிடையாது. அந்தக் கொள்கைகளுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களில் எழுச்சியோடு பங்கேற்றுவரும் வங்கி ஊழியர் - அதிகாரிகளின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் குரலும் அந்தக் கொள்கைகளுக்கு எதிராக ஒலிப்பவை. இந்தப்போராட்ட உணர்வுகளை மாற்றுக் கொள்கை களுக்கான வேட்கையாக வளர்த்தெடுக்கவும், அரசியல் களத்தில் அதன் பிரதிபலிப்பை ஏற்படுத்தவும் கூட வழி வகுக்கட்டும் இந்தப் போராட்டம்.
எஸ்.வி.வேணுகோபாலன்
எதற்காக இந்த வேலைநிறுத்தம்? இதை தவிர்த்திருக்க முடியாதா? என்ற கேள்விகளை இணையதளத்திலும், பொது இடங்களிலும் சந்திக்கிறோம். ஊதிய உயர்வுக்கான போராட்டத்தினால், சாதாரண மக்கள் ஏன் வங்கிச் சேவையை இழக்க வேண்டும் என்றும் கேட்கப்படுகிறது. வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கான ஒன்பதாவது ஊதிய ஒப்பந்தம் அக்டோபர் 31, 2012 தேதியுடன் முடிவுக்கு வந்தது. அடுத்த ஒப்பந்தத்திற்கான கோரிக்கைகளை நேரத்தே சமர்ப்பித்தது வங்கி ஊழியர் - அதிகாரிகளின் கூட்டுப் போராட்ட ஐக்கிய மேடை. ஆனால், ஓராண்டுக்காலம் வரை நடந்த ஐந்தே ஐந்து சந்திப்புகளில், கடைசிவரை ஊதிய உயர்வு எந்த விகிதத்தில், என்ன அடிப்படையில் வழங்க உத்தேசிக்கிறோம் என்பதை இந்திய வங்கிகள் கழகம் தெரிவிக்கவே இல்லை. அது மட்டுமல்ல, அவர்கள் தரப்பில் முன் வைத்திருக்கும் எதிர் கோரிக்கைகளைப் பேசாமல் மேற்கொண்டு எதுவும் நகராது என்றும் பிடிவாதம் பிடித்தனர் நிர்வாகத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவினர். அந்த எதிர்க் கோரிக்கைகளின் தன்மை மிக மிக மோசமான முறையில் ஊழியர்களைப் பிரித்தாளும் நோக்குடனும், ஒன்பது சங்கங்கள் கூட்டாக ஒருமித்த குரலோடு போராடும் வண்ணம் வளர்த்தெடுத்திருக்கும் ஒற்றுமையை சவாலுக்கு இழுப்பதுமாகும். 30 ஆண்டு பணிக்காலம் முடித்தோர் அல்லது 55 வயதை நிறைவு செய்தோரை பணிநீக்கம் செய்யும் உரிமை, யாரையும் எங்கும் கிளை மாற்றல் செய்யும் அதிகாரம், வங்கி வாரி தனித் தனி ஒப்பந்தம், செலவினங்களை அதிகம் பணியாளர் தலையில் சுமத்துவது போன்ற விஷயங்களை ஒப்புக்கொள்ளுங்கள் என்று கேட்கின்றது நிர்வாகக் குழு. இவற்றை முற்றாக நிராகரித்த கூட்டுப் போராட்ட மேடை, வங்கித்துறை சீர்திருத்தங்களை அமல்படுத்துவதை எதிர்த்தும் இந்தப் போராட்டத்தை நடத்துகிறது.
2013 நவம்பர் வரையிலும் எந்தப் பிடியும் கொடுக்காமல் நிர்வாகக் குழு இழுத்தடிக்கும் போக்கைத் தொடர்ந்தது. எனவே, டிசம்பர் 18 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு கூட்டுப் போராட்டக் குழு அறைகூவல் விடுத்தது. போராட்ட தினம் நெருங்கும் நேரத்தில் வங்கி நிர்வாகங்களின் குழு 5 சதவீத உயர்வு தருவதாக அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டாம் என்று சொன்னது ஊழியர், அதிகாரிகளை மிகுந்த கோபாவேசத்திற்கு உட்படுத்தியது. அந்த வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றது. அதன் பிறகும் நிர்வாகக் குழுவின் போக்கில் முன்னேற்றம் அற்றுப் போகவே, ஜனவரி 20, 21 இரண்டு நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதென சங்கங்கள் முடிவெடுத்தன. நிர்வாகத் தரப்பு தனது புறக்கணிப்பு மனப்பான்மையை மேலும் வெளிப்படுத்துவது போல, பேச்சுவார்த்தை தேதியை ஜனவரி 29 என்று அறிவித்து மேலும் அவமதித்தது. மத்திய தொழில் ஆணையர் அழைத்து அறிவுறுத்திய பின்னர், ஜனவரி 17 அன்று பேச்சுவார்த்தையை நடத்திய இந்திய வங்கிகள் கழகம், 9.5 சதவீதம் தருவதாக அறிவித்தது. அதை பேச்சுவார்த்தை தொடக்கப் புள்ளியாக வைத்துக் கொண்டு, மேற்கொண்டு உயர்வு தர ஒப்புக் கொண்டால் பேச்சுவார்த்தை தொடரலாம் என்ற பரஸ்பர ஒப்புதலில் ஜனவரி இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை சங்கங்கள் ஒத்தி வைத்தன.
ஆனால், மீண்டும் அடுத்த சந்திப்பில் மேற்கொண்டு அரை சதவீதத்திற்கு மேல், அதாவது 10 சதவீத உயர்வுக்குமேல் தர இயலாது என்று நிலையெடுத்தது நிர்வாகத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழு. அதோடு மட்டுமின்றி, தங்களது எதிர்க் கோரிக்கைகள்மீது உடன்பாடு எட்டாமல் மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை என்றும் நிலையெடுத்தது. இந்தப் பின்னணியில்தான் பிப்ரவரி 10, 11 இரண்டு நாள் வேலைநிறுத்தம் நடத்துவதென மேற்படி சந்திப்பு நிகழ்ந்த ஜனவரி 27 அன்றே கூட்டுப் போராட்டக் குழு அறைகூவல் விடுத்தது. இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் ஊழியர் அதிகாரிகளின் நூறு சதவீத பங்கேற்பு அவர்களது கோரிக்கையின் நியாயத்தையும், போராட்ட உறுதியையும், ஒன்றுபட்ட இயக்கத்தின் வலுவையும் பிரதிபலிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் கண்மூடித் தனமாக வங்கிக் கிளைகளை மூடிக் கொண்டிருந்த நிர்வாகங்கள், அதற்கு எதிரான தொழிற்சங்கக் குரல்களை மதிக்கவில்லை. 15 ஆண்டுகளில் 4750 கிராமப்புற வங்கிக் கிளைகள் மூடப்பட்டன என்று பத்திரிகையாளர் பி. சாய் நாத் 2008ம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இப்போதோ, ஒவ்வொரு வங்கியும் போட்டி போட்டுக் கொண்டு நூற்றுக் கணக்கில் கிளைகளைத் திறக்கின்றன. பெரும்பாலானவை பெருநகர, நகரக் கிளைகள் தான் என்றாலும், இவற்றுக்கான ஊழியர்களை அருகிலிருக்கும் கிளைகளிலிருந்து எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றன நிர்வாகங்கள். தனி நபர் வர்த்தக அளவு, தனி நபர் லாபப் பெருக்கம் எல்லாம் பல மடங்கு உயர்ந்தபின்னும், பெருகும் கிளைகளின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்தில் ஊழியர் எண்ணிக்கை குறைந்து கொண்டும் இருக்கிறது. வேலைப்பளு பல மடங்கு கூடி வருவதால், கிளைகளில் வாடிக்கையாளர் சேவை படுமோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அன்றாடத் தள்ளுமுள்ளுகள் தவிர்க்க முடியாது போய்க் கொண்டிருக்கின்றன. 5 லட்சம் காலி இடங்களை நிரப்பத் தயாராக இல்லாத வங்கி நிர்வாகங்களுக்கு, பணியில் இருக்கும் ஊழியர்களைப் பந்தாடி மகிழ்வதும், பழிவாங்கத் துடிப்பதுமே பொழுது போக்காகி வருகிறது. சந்தைப் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்ட ஆட்சியாளர்கள், பொதுத் துறை வங்கிகளையும் லாப நோக்கை முன்னிறுத்தும் வண்ணம் நிர்ப்பந்திக்கின்றனர். சாதாரண மக்கள் சேவைக்கு இருப்பதைவிடவும் பெருந்தொழில் வர்த்தக சேவைக்கே இனி முன்னுரிமை.
இத்தனைக்கும் இன்று வங்கிகள் ஈட்டும் லாபத்தின் பெரும்பங்கை அரித்துக் கொண்டிருப்பவை மேற்படி கனவான்கள் கும்பல்களுக்கு வாரி வாரி அளித்த கடன்கள் திரும்ப வராது போனதால் வாராக் கடன்கள் என இலக்கிய நயமாகப் பேசப்படும் நிலுவைக் கணக்குகள் தான். அவர்கள்பால் இரக்கத்தோடு தள்ளுபடி பேரத்தை நடத்தியும் திருப்தியுறாத ஆட்சியாளர்கள், இத்தகு நிறுவனங்களுக்கே புதிய வங்கிகளை நடத்தும் உரிமம் வழங்கவும் துடிப்பது அராஜகமானது. இடதுசாரிகள் எதிர்ப்பையும், தொழிற் சங்கப் போராட்டங்களையும் மீறி தனியார் மயத்தை ஊக்கப் படுத்தவும், பொதுத் துறை வங்கிகளை வலுவிழக்கச் செய்யவுமான சீர்திருத்தங்கள் சட்டமாக இயற்றப் பட்டு விட்டன. இவற்றை நடைமுறைப் படுத்த விடாது எதிர்த்துப் போராடும் தொழிற்சங்க போராட்டங்களை முடக்கும் நோக்கோடுதான் வங்கி வாரி ஒப்பந்தம் உள்ளிட்ட எதிர் கோரிக்கைகளை இந்திய வங்கிகள் கழகம் முன்னிறுத்துகிறது. போராட்ட ஒற்றுமையை உடைக்கும் நோக்கோடு வேறு சில முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டக் கோரிக்கைகளின் அடிநாதம் என்று பார்த்தால் நியாயமான ஊதிய உயர்வு, ஆரோக்கியமான வேலைச் சூழல், பொதுத் துறை பாதுகாப்பு என்று சொல்லலாம். இந்தக் கோரிக்கைகளின்பால் சீரிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாரில்லாத நிர்வாக அமைப்புதான் குற்றவாளியே தவிர, தொழிற்சங்கங்கள் வேண்டுமென்று போராட்டத்தில் குதிக்கவில்லை. பேச்சு வார்த்தையின் போக்கை தீர்மானிப்பதில் மத்திய அரசுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் பெரும் பங்கு உண்டு. ‘வங்கித் துறை வேலைகள் அத்தனை வசீகரமாக இருக்க வேண்டியதில்லை, ஊதிய நிலைமை மேம்படுத்தித் தரவேண்டியதில்லை, ஆட்குறைப்புக்கும் அது வசதிப்படும்‘ என்ற உள்நோக்கம் அவர்களுக்கு இருப்பதாகக் கருத இடம் உண்டு. அதனாலும் கூட இந்தப் போராட்டங்கள் தவிர்க்க முடியாததாகிறது.வங்கித்துறை உள்ளிட்ட நிதித் துறையைச் சீரழிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கும், இதே பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்த பாஜக தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் இந்தக் கருத்தில் நிச்சயம் வேறுபாடு கிடையாது.
அதாவது காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் நவீன தாராளமயக் கொள்கையில் கிஞ்சிற்றும் வித்தியாசம் கிடையாது. அந்தக் கொள்கைகளுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களில் எழுச்சியோடு பங்கேற்றுவரும் வங்கி ஊழியர் - அதிகாரிகளின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் குரலும் அந்தக் கொள்கைகளுக்கு எதிராக ஒலிப்பவை. இந்தப்போராட்ட உணர்வுகளை மாற்றுக் கொள்கை களுக்கான வேட்கையாக வளர்த்தெடுக்கவும், அரசியல் களத்தில் அதன் பிரதிபலிப்பை ஏற்படுத்தவும் கூட வழி வகுக்கட்டும் இந்தப் போராட்டம்.
No comments:
Post a Comment