Sunday, February 9, 2014

சேவை வரியை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு முன்பு உண்ணாவிரதம்
எல்ஐசி முகவர்கள் சங்கத் தலைவர் அறிவிப்பு


சென்னை, பிப். 8-
சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி பிப். 20 அன்று மத்திய நிதி அமைச் சரின் வீடு முன்பு உண்ணா விரதப் போராட்டம் நடத்த உள்ளதாக எல்ஐசி முகவர் கள் சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.சுத்தானந்தம் தெரி வித்தார். அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் சார் பில் பிப். 5 முதல் 8 வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி தென்மண்டல அலு வலகம் முன்பு நடைபெற் றது.
நான்கு நாட்கள் நடை பெற்ற இந்தப் போராட்டத் தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து ஆயிரத் திற்கும் மேற்பட்ட முகவர் கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் எஸ்.சுத்தானந்தம் பேசுகை யில் “ எல்ஐசி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது என்றார். குறைந்த பட்ச பாலிசி தொகையை 50 ஆயிரம் ரூபாயாக குறைக்க வேண் டும், பாலிசிகளை புதுப்பிக் கும் ஆண்டை மீண்டும் 5 வருடமாக மாற்ற வேண் டும், பாலிசி எடுக்க நுழைவு வயதை மீண்டும் 65 ஆக உயர்த்த வேண்டும், பாலிசி காலத்தை பழைய முறைப் படி தொடர்ந்திட அனும திக்க வலியுறுத்தி நாடு முழுவதும் இந்த உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிப். 20 அன்று தில்லியில் மத்திய நிதிமைச்சர் வீட்டு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள் ளோம். அடுத்தநாள் பிப். 21 ல் அனைத்து கட்சி,அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்கும் தேசிய அளவி லான கருத்தரங்கமும், நடை பெறுகிறது என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.ஏ.கலாம் தலைமை தாங்கினார்.
அகில இந்திய செயல் தலைவர் எஸ்.எஸ்.போட்டி, எல்.ஐ.சி.பென்சனர் அசோசியேசன் தலைவர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி,தென் மண்டல செயலாளர் எம்.செல் வராஜ், மாநிலப் பொருளா ளர் கே.தாமோதரன், டி.சி. லோகநாதன், வெங்கடே சன், ஆர்.முருகேசன் உள் ளிட்ட பலர் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசி னர். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.என்.தியாக ராஜன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார்.

No comments:

Post a Comment