கே.சி.கோபிகுமார்
அதாவது மருத்துவம், மருந்துகள், சுகாதாரம் போன்றவற்றிக்கு செலவழித்து வருகின்றனர். மருத்துவமும், சுகாதாரமும் போன்ற அடிப்படை வசதிகளை ஆட்சியாளர்கள் தங்களது மக்களுக்கு செய்துதர வேண்டிய கடமையாகும். அதாவது சுகாதார நலன் பயப்பவை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சத்தான, சீரான உணவு, தரமான மருத்துவ சேவை செய்வது அரசின் கடமையாகும். ஆனால், நமது நாட்டில் இவை அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.அரசு தனது மக்களுக்கு நோய் வராமல் தடுத் திட நோய் குணப்படுத்தும் முறைகளை அமல்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். நமது ஆட்சி யாளர்கள் இதை செய்யத் தவறியதால் 40 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் சத்தான உண வின்றி நோய்வாய்ப்பட்டு வருகின்றனர்.
69 சதவீத மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளது. இதனால் பல வகையான நோய்கள் பரவி வருகிறது. கிராமப்புறங்களில் 30சத மானத்திற்கும் குறைவானவர்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.1990 முதல் ஆட்சியாளர்கள் அமல்படுத்திய தாராளமய, உலகமய கொள்கைகளின் விளைவு, புற்றீசல்கள் போன்று பல்லாயிரக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற தரமான ஆசிரியர்கள் இல்லாமல், உரிய கட்டமைப்பு இல்லாமல் பல நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனால் நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி நோயாளிகள் பணம் செலவழித்தும் தரமான சிகிச்சை இல்லாமல் இறந்து வருகின்றனர்.
மேலும் ஓர் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் `இங்கிலாந்து அரசு நமது நாட்டு மருத்துவர்கள் போதுமான பயிற்சி, தரம் இல்லாத காரணத்தினால் இந்தியாவிற்கு திரும்பி அனுப்பியுள்ளது’.ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் மோசமான தாராளமய மற்றும் உலகமயக் கொள்கையின் காரணமாக மீண்டும் மலேரியா, டெங்கு பயிலேரியா போன்ற நோய்கள் பரவி வருகிறது. அதுமட்டுமல்ல இந்த கொள்கையின் பரிசாக பறவைக் காய்ச்சல், எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்கள் வேகமாக பரவி வருகிறது.
உலகத்தில் காசநோயால் அவதிப்படும் நோயா ளிகளில் 21 சதவீதமும், தொழுநோய், மலேரியா 56 சதவீதமும், 40 சதவீதம் வாந்திபேதி போன்ற நோய்களால் அவதிப்படுவோர் இந்தியர்கள் ஆவர். இவைஅனைத்திற்கும் காரணம் இதுநாள் வரை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த மோசமான கொள்கை களாகும். அதே கொள்கைகளைத்தான் தற்போது மோடி சர்க்கார் கட்டவிழ்த்துவிட முயற்சிக்கிறது.நமது நாட்டின் 69கோடி மக்களுக்கு அத்தியா வசிய மருந்துகள் மற்றும் மருத்துவசேவை கிடைக்கவில்லை. ஆனால் இந்தியா உலகத்தில் மருந்து உற்பத்தியில் 3வது இடத்தை பிடித்துள்ளது. 200 நாடுகளுக்கு மருந்து, மருத்துவ சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கத்தால் வளர்க்கப்பட்ட மருந்து துறையில் ஆட்சியாளர்கள் 100சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு மக்களின் நலனை ஆட்சியாளர்கள் அடகு வைத்துள்ளனர். நமது நாட்டு மருந்து நிறுவனங்களான சுஹசூக்ஷஹஓலு, னுஹக்ஷருசு, ஞஐசுஹஆஹடு, ஞஹசுஹளு, ஊகுடு, ருசூஐஏநுசுளுஹடு, ஆநுனுஐஊஹசு, ளுஹசூகூழஹ க்ஷஐடீ கூநுஊழ போன்ற நிறுவனங் களை பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் கபளிகரம் செய்துள்ளது. இதன் விளைவாக மருந்து துறையில் ஏகபோகம் ஏற்பட்டு மருந்து விலைகள் மற்றும் மருத்துவசேவை கட்ட ணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.சாதாரண மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு உள்ளே சென்றால் உயிர் பிழைத்து வருவதென்பது அரிது.
தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் தனது உடமை களை விற்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்றசூழல் உள்ளது. தனது தினக்கூலி, மாத சம்பளம் நம்பிவாழும் முறைசாராத் தொழிலாளி, நடுத்தரக் குடும்பத் தினருக்கு புற்றுநோயோ அல்லது ஈரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களது நிலைமை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இந்த நோய்களுக்கான சிகிச்சையின் செலவு என்பது பல லட்சங்களாகும். புற்றுநோய் சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்திலிருந்து 3லட்சம் ஆகும். ஈரல் அழற்சி நோயிக்கான மருந்துகளின் செலவு மட்டுமே ரூ.3.60லட்சமாகும். இப்படி மருத்துவ செலவிற்கு மட்டுமே அதிக அளவில் செலவு செய்யவேண்டிய நிலையில் மக்களைஅரசு தள்ளிவிட் டுள்ளது.
மோடி தலைமையிலான புதிய அரசு அமெரிக்க கொள்கைகளை பின்பற்றாமல் சீனா, ஜெர்மனி, இலங்கை, மலேசியா, பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் சுகாதாரக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.ஜெர்மனி அரசு தனது நாட்டு மக்கள் தொகை யில் 99 சதவீதமான மக்களுக்கு சமூக நலன் காப் பீடு திட்டத்தில் இணைத்து அனைவருக்கும் இலவசமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் சீன அரசு மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து அடிப்படை வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், சீரான சத்துணவு, பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவு, சுகாதார நன்முறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது போன்றவற்றை தனது மக்களுக்கு இலவசமாக செய்து வருகிறது.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஏற்கனவேமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது போன்று உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3சதவீதம் சுகா தார மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கிட வேண்டும். அதுமட்டுமல்ல ஏற்கெனவே திட்டக்குழு 12வது திட்ட காலத்திற்கு 10.8 லட்சம் கோடி ஒதுக்கிட வேண்டுமென்று பரிந்துரைத்தது. அதில் கடந்தஆட்சியாளர்கள் 40 சதவீதம் கூட ஒதுக்கவில்லை. மோடி அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் விரோதக் கொள்கைகளை தவிர்த்து,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வெஞ்சாமரம் வீசாமல் மக்கள் நலன்களை பாதுகாக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
No comments:
Post a Comment