”இன்றைக்குச் சரியாக 100 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த உரையாடலைத் தனது சுயசரிதையில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார் தேசத் தந்தை மகாத்மா காந்தி.காந்தியுடனான இந்தச் சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களில் 22.10.1914 அன்று, அப்போது16 வயதே ஆன வள்ளியம்மை மரணமடைகிறாள்.
1914 ஜூலை 15 அன்று, தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு, ஜோகன்ஸ்பர்க் நகரத்தின் பிராம்ஃபோன்டைன் தோட்டத்தில் நடைபெற்ற கல்லறை திறப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காந்திஜி, “தில்லையாடி வள்ளியம்மையின் பெயர் தென் ஆப்பிரிக்க சத்யாக்ரகிகளின் சரித்திரத்தில் மட்டுமல்ல, இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்“ என்று கூறினார்.
இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தின் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள சிற்றூரான தில்லையாடியைச் சொந்த ஊராகக் கொண்டு, தங்கள் பிழைப்பிற்காகக் கடல் கடந்து தென் ஆப்பிரிக்கா சென்று அங்கே பேக்கரி மற்றும் பழக்கடை நடத்தி வந்த முத்துசாமி-மங்களம் தம்பதியரின் புதல்வியாக 1898 பிப்ரவரி 22-ல் ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர் வள்ளியம்மை.காந்திஜியின் அறைகூவலை ஏற்று, தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொடுமை மற்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தன் தாயாருடன் சேர்ந்து ஆர்வமுடன் பங்கேற்றார் வள்ளியம்மை.1913 அக்டோபரில் டிரான்ஸ்வால் நகர் முதல் நேடால் வரை நடைபெற்ற நடைபயணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்தது தென் ஆப்பிரிக்க அரசு. மூன்று மாதக் கடுங்காவல் தண்டனைக்குப் பின் சிறையைவிட்டு வெளியே வந்த சில நாட்களுக்குள், தாய்நாட்டு மண்ணைப் பார்க்காமலேயே வீரமரணம் எய்தினார் தில்லையாடி வள்ளியம்மாள்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வழிநெடுகிலும் மகத்தான பங்களிப்பை புரிந்துள்ள பெண் போராளிகளின் வரிசையில் தனி இடத்தைப் பெற்றுள்ள,நம் தமிழகத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மையின் வாழ்வும், உயிர்த்தியாகமும் எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீராங்கனைகளுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தது என்று கூறினால் அது மிகையன்று.இந்திய சுதந்திரத்தின் மாண்புகளை நினைவுகூர்வோம். தேசம் மீண்டும் அடிமைப்படுத்தப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்த உறுதிகொள்வோம்.
க.மன்னன்நன்றி: காப்பீட்டு ஊழியர்
No comments:
Post a Comment