மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு அறிக்கை
மக்களவைத் தேர்தல் முடிவு
மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து மத் தியக்குழு விவாதித்து பரி சீலனை அறிக்கை ஒன்றை நிறை வேற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் கட்சிக்கு பலவீனமான நிலை ஏற்பட் டுள்ள நிலையில் மத்தியக்குழு மிக ஆழமான விவா தத்தை நடத்தியது. தோல்விக்கான பிரதான பொறுப்பை கட்சியின் அரசியல் தலைமைக் குழு வும் மத்தியத் தலைமையும் ஏற்றுக் கொள்கிறது. கட்சியின்சுயேட்சையான பலத்தை விஸ்தரிக்காததும், கட்சியின் வெகுஜன அடித்தளத்தில் ஏற்பட்டு ள்ள சரிவும் தேர்தல் முடிவில் பிரதி பலித்துள்ளது. மேற்குவங்கத்தில் கட்சியும், இடது முன்னணியும் கடுமையான பின்ன டைவைச் சந்தித்துள்ள நிலையில் மேற்குவங்க தேர்தல் முடிவு குறித்து மத்தியக்குழு ஆய்வு செய்தது.
மேற்கு வங்கத்தில் கட்சிக்குள் எடுக்கப்பட வேண்டிய அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகள் குறித்து விவாதித்த மத்தியக்குழு, பணிகளை மேம்படுத்தி மக்களுடன் நெருக்கமான தொடர்பி னை ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தது. உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து கட்சி போராட்டங்களையும் இயக்கங்க ளையும் தலைமை தாங்கி நடத்தும். தொடர்ச்சியான தாக்குதலை சந்தித்து வரும் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதர வாளர்களை பாதுகாக்க உடனடி நட வடிக்கைகள் எடுக்கப்படும். முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு பெற்றுள்ள வெற்றிக்காக கட்சி யின் திரிபுரா மாநிலக்குழுவிற்கு மத்தி யக்குழு வாழ்த்து தெரிவிக்கிறது.
மிக அதிக வித்தியாசத்தில் இரண்டு தொ குதிகளையும் இடது முன்னணி கைப் பற்றியுள்ளதோடு, கட்சி மற்றும் இடது முன்னணி பதிவான வாக்குகளில் 64.4 சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. கட்சியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் ஸ்தாபன பணிகளை ஆய்வு செய்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்தியக்குழு முடிவு செய்துள்ளது.
மக்களிடம் செல்லவும், வெகுஜனங்களின் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு, மக்களின் வாழ்வாதார நலன்களையும், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க அயர்வற்ற போராட்டங்களையும், இயக்கங்களை யும் நடத்துவது என்று மத்தியக்குழு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்பட் டுள்ள புதிய அரசியல் சூழ்நிலையால் விடுக்கப்பட்டுள்ள சவால்களை ஒன்றுபட்டுச் சந்திப்பது என்று மத்தி யக் குழு முடிவு செய்துள்ளது.
திரிணாமுல் வன்முறைக்கு கண்டனம்
மேற்குவங்கத்தில் இடதுசாரி இயக் கங்களின் ஊழியர்கள் மற்றும் ஆதரவா ளர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் நிகழ்த்தப்படும் தொடர்ச்சி யான வன்முறை மற்றும் தாக்குதல்க ளை மத்தியக்குழு கண்டிக்கிறது. தேர் தலின் போதும் அதற்கு பின்பும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கள் மற்றும் ஆதரவாளர்கள் படுகொ லை செய்யப்பட்டுள்ளனர். கட்சி மற் றும் இடதுசாரி சக்திகள், ஜனநாயகத் தை பாதுகாக்கவும் மேற்குவங்கத்தில் தொ டுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை எதிர்த்தும் நாடு தழுவிய ஆதரவு இயக் கங்களை நடத்திடுமாறு மத்தியக்குழு அறைகூவல் விடுக்கிறது.
புதிய அரசு
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலை யில் விலைவாசி உயர்வு, வேலையின் மை, விவசாயத் துறை நெருக்கடி, பெண்களுக்கு எதிராக அதிகாரித்து வரும் குற்றங்கள் ஆகிய தீவிரமான பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பாஜக தலைமையிலான அரசு பிரச்சனைகளை தீவிரப்படுத்து வதிலும், பிளவுவாதத்தை தூண்டுவதி லும் தான் அதீத ஆர்வம் காட்டுகிறது. அரசியல் சாசனத்தில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஒரு அமைச்சர் பேசியிருப்பது பெரும் அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநில மக்களை மேலும் தனிமைப் படுத்தவே இது இட்டுச்செல்லும். இந்திய யூனியனுடன் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இணைந்தபோது அந்த மாநி லத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் படும் என அந்த மக்களுக்கு அளிக்கப் பட்ட வாக்குறுதிக்கு எந்த வகையிலும் ஊறு ஏற்படுத்தக்கூடாது.பாதுகாப்புத்துறை மற்றும் காப் பீட்டுத் துறை உள்ளிட்ட துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிப்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இத்தகைய நடவடிக்கை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. சுரங்கம் மற்றும் மின் துறைகளில் ஏராளமான திட்டங்களு க்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்குவதற்கான முயற்சிக ளும் மேற்கொள்ளப் படுகின்றன. இத னால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதோடு பழங்குடி மக்களின் உரிமைகளும் பாதிக்கப்படும். சுற்றுச் சூழல் அம்சங் கள் மற்றும் பழங்குடி, உள்ளூர் மக்களின் உரிமைகள் ஆகிய வற்றை கணக்கில் கொள்ளாமல் மோடி அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைக ளில் ஈடுபடக்கூடாது.
அதிகரிக்கும் வகுப்புவாத மோதல்கள்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து புதிய அரசு பொறுப்பேற் றவுடனேயே நாட்டில் பல்வேறு பகுதி களில் ஏராளமான வகுப்புவாத வன் முறைகள் நிகழ்ந்துள்ளன. குஜராத், மகாராஷ்டிரம், உ.பி., கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வகுப்புவாத மோதல் கள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறு கின்றன. புனேயில் இந்து ராஷ்டிர சேனை என்ற அமைப்பைச்சேர்ந்தவர் களால் இளம் இஸ்லாமிய மென் பொருள் பொறியாளர் படுகொலை செய் யப்பட்டுள்ளார். சிறுபான்மை மக்களை பழிவாங்கும் வெறியுடன் இத்தகைய வகுப்புவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப் படுகின்றன. இத்தகைய தாக்குதல் களை மத்தியக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து வகையான வகுப்புவாதத்தையும் கண்டிக்கும் அதே நேரத்தில் சிறுபான்மை சமூக மக்களை பாதுகாப்பதற்கான போராட் டங்களையும் கட்சி நடத்தும்.
பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக் கெதிராக அதிகரித்து வரும் பாலியல் ரீதியான குற்றங்கள் பெரும் கவலையை ஏற்படுத்துவதோடு பெண்கள் பாது காப்பாக வாழ்வதற்கான நாடு தானா இந்தியா என்ற கேள்வியையும் எழுப்பு வதாக உள்ளது. பதானில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வுக ளில் கூட குற்றவாளிகள் மீது நடவடிக் கை எடுப்பதற்கான அரசியல் உறுதி அரசுகளுக்கு இல்லை. உ.பி மாநிலம் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட மீறல்கள் ஏற்பட் டுள்ளதை தடுக்க உ.பி. மாநில அரசு தவறிவிட்டது.
சிறுமிகள் பாலியல் ரீதியாக படுகொலை செய் யப்பட்ட கொ டூர சம்பவத்திலும் கூட சமாஜ்வாதி கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் முரண்பட்ட கருத் துக்கள், இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் காவல் துறையின் அலட்சி யத்தை அங்கீகரிப் பதாக அமைந்துள் ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் பெண் களுக்கெதிரான பாலியல் ரீதியான தாக்குதல்கள்அதிகரித்துள்ளன.முதல் வரின் சொந்தத் தொகுதியில் கூட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர்கள் பெண் களுக்கெதிரான பாலியல் தாக்குதல் கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக் கள் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்த மாநி லங்களில் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு நீதி கிடைப் பதற்கான வாய்ப்பு உண்டா? என்ற அச்சத்தை எழுப் புவதாகவும் இவர்கள் கருத்துக்கள் உள்ளன. மேற்குவங்கத் திலும் பெண்களுக்கெதிரான தாக்கு தல்கள்அதிகரித்தவண்ணமேஉள்ளன.சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தவறிழைப்போர்கள் மீது உறுதியான, கடுமையான நடவடிக்கைகள் எடுப்ப தன் மூலம் பெண்களுக்கெதிரான கொ டுமைகளை சகித்துக் கொள்ள முடி யாது என்பதை நிலைநாட்ட வேண் டும்.
(ஐஎன்என்)
No comments:
Post a Comment