Monday, May 5, 2014

பேராவூரணி, மே 5 -பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீரவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க, பெருமுதலாளிகள்,நிலச்சுவான்தார்கள் ,ஜமீன்தார்கள் அதிகாரத்திலும் , ஆணவத்திலும் மிதந்து ,பாட்டாளிகளை கொடுமைப்படுத்தி வந்த காலம் ....ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் போர்க்குரலாக பொதுவுடமை இயக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் போராடி வந்தன.
ஒரு கட்டத்தில் இயக்கங்கள் தடை செய்யப்பட தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு மக்கள் நலப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்த வாட்டாகுடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், ஜாம்புவானோடை சிவராமன் போன்றோருக்கு எதிராக காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.துரோகிகளால் காட்டிக் கொடுக் கப்பட்டு ஜாம்புவானோடை சிவ ராமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
மணலி கந்தசாமி தலைமறை வாக இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தால் விட்டு விடுவதாக ஆசை வார்த்தை காட்டியபோது, தெரியாது என மறுத்துவிட்டார். நீ ஓடி தப்பித்து போய் விடு என காவல்துறை அதிகாரிகள் சொன்னபோது, `சிவராமன் தப்பி ஓடினான். சுட்டுக்கொன்றோம் என்று சொல்வாய். நான் ஒன்றும் கோழை அல்ல. தப்பி ஓட... என்று கூறி நெஞ்சில் சுட்டா... ஏவல்துறையே... என்று கூறி நெஞ்சில் குண்டு தாங்கி வீரமரணத்தை தழுவினார் தியாகி ஜாம்புவானோடை சிவராமன் .ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு கிராமத்தில் பிறந்த வீரத்தியாகி ஆறுமுகம். அப்பகுதியில் செங்கொடி யை சுடர்விட்டு பிரகாசிக்க பெரும்பங் காற்றினார். அதிகார வர்க்கம் செங் கொடியை, கம்யூனிச இயக்கத்தை, அதன் விவசாய சங்கத்தை அழிக்க திட்டம் தீட்டி சமயம் பார்த்து காத்திருந்தனர்.மதுக்கூரை அடுத்த வாட்டாகுடியில் பிறந்த வீரத்தியாகி இரணியன் மலேசிய தேசத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பங்கேற்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடினார்.
மலேசியாவில் பிரிட்டிஷ் அரசு இரணியனை தேடத்தொடங்கியதும் தமிழகத்திற்கு தப்பி வந்த இரணியன் மறவக்காடு கிட்டு போன்ற தோழர்களுடன் இணைந்து இப்பகுதியில் இயக்கத்தை கட்டி எழுப்பினார். ஏழை-எளிய மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசு ஜமீன்தார்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டது.ஜமீன்தார்கள், நிலச்சுவான் தார்கள், அவர்களின் அடிவருடி கள் செல்வச்செழிப்பில் கொழிக்க, நாளெல்லாம் கழனியில் பாடுபடும் உழைப்பாளியோ பசியும் பட்டினியு மாகக் கிடந்து பெரும் சித்ரவதை அனுபவித்து வந்தனர். அவர்களுக்காக போராடி வந்த இரணியனை காவல்துறை தேடி வந்தது.இந்நிலையில் வாட்டாகுடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகிய இருவரும் துரோகிகளால் காட்டி கொடுக்கப்பட்டனர் , வடசேரி சவுக்கு காட்டில் வைத்து காவல்துறையால் கட்டி வைத்து சுடப்பட்டனர்.
புரட்சி ஓங்குக...செங்கொடி வாழ்க என வீரமுழக்கத்தோடு இருவரும் வீரமரணத்தை தழுவினர் .இந்த மூன்று வீரத்தியாகிகளும் பட்டுக்கோட்டை கரிக்காட்டில் அந்த காலகட்டத்தில் காவல்துறையால் தகனம் செய்யப்பட்டனர் .அந்த வீரத்தியாகிகள் மூவரின் 64 வது நினைவு தினத்தையொட்டி மே 5

No comments:

Post a Comment