Friday, July 25, 2014

கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் பட்ஜெட்
பி.ராஜீவ் எம்.பி.


பட்ஜெட் உரையில் முதல் வரியிலேயே நிதி அமைச்சர் அவர்கள் `மாற்றம்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருந்தார். ஆனால் அந்த வார்த்தைக்கு எந்த உட்பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐமுகூ அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கும் தேஜகூ அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கும் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. அதனால்தான் ஆனந்த சர்மாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் எங்கள் பட்ஜெட் பாணியில்தான் இதுவும் இருக்கிறது என்கின்றனர்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இதே தொனியில் இவர்களைப் பாராட்டியிருக்கிறார். காங்கிரஸ் சார்பான ஐஎன்டியுசி சங்கம் ஐமுகூ சமர்ப்பித்த பட்ஜெட்டையும் விமர்சித்தது. பாஜகவுடன் நெருங்கிய உறவுகொண்டுள்ள பிஎம்எஸ் சங்கம், இப்போது ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டையும் விமர்சித்துள்ளது. குடியரசுத் தலைவர் உரையின்மீதான விவாதத்தின்போது சீத்தாராம் யெச்சூரி சரியாகச் சுட்டிக்காட்டியதைப்போல இடைமாற்று ஓட்டப் பந்தயத்தில் குறுந்தடியை வாங்கிக்கொள்வதைப் போல பாஜக, காங்கிரசிடமிருந்து குறுந்தடியை வாங்கிக் கொண்டுள்ளது. இப்போது காங்கிரசார் ஓடியதைவிட வேகமாக இவர்கள் ஓடிக்கொண் டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு அவர்களைவிட மிக வேகமாக சலுகைகளை வாரி வழங்கிட முன்வந்திருக் கிறார்கள்.
அதேபோன்று அவர்களைவிட மிகவும் அதிகமான அளவில் மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எதார்த்தநிலை. நம் ஜனநாயகத்தின் உண்மையான தோற்றம் மிகவும் சுருங்கிவிட்டது. ஜனநாயகத்தில், தேர்தல்களில் மக்கள்ஓர் அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவருக்கு வாக்களிப்பார்கள். அந்த அரசியல் கட்சி ஒரு சித்தாந் தத்தை மற்றும் கொள்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும். ஆனால் இப்போ துள்ள நிலை என்ன? இருவருமே ஒரேவிதமான கொள்கைகளையே பிரதிபலிக் கிறார்கள். இதுதான் இன்று நம் நாட்டில் ஜனநாயகத்தின் நிலை.இருந்தாலும் ஐமுகூ பட்ஜெட்டின் மீது சில காவி ஒப்பனைப் பொருள்களை சேர்க்க ஜெட்லி முயற்சித்திருக்கிறார். தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு “காவி உதட்டுச்சாயத்துடனான ஒரு சிதம்பரம் பட்ஜெட்’’ என்று மிகச்சரியாகவே ஒரு நல்ல தலைப்பை பட்ஜெட்டுக்குக் கொடுத்திருக்கிறது. அதனை பட்ஜெட் முழுவதும் பார்க்க முடிகிறது.
பிரதமர் அவர்களும், இதர அமைச்சர் களும் சீன மாடல் குறித்து எப்போதும் பேசுகிறார்கள். சீன மாடலின் அனுபவம் என்ன? பொது முதலீடுகளின் மூலம்உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் நாம் நிதி நெருக்கடிக் கொள்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நான் இந்த நிதி நெருக்கடி மந்திரத்திற்கு முற்றிலும் எதிரானவன். வருவாய் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உண்மை. ஆனால் நிதிப் பற்றாக்குறை குறித்து என்ன? நாம் நம் பணத்தை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத் தினால், அது வேலைவாய்ப்பை அதி கரித்திடும். மக்களுக்கு அதிகப் பணம் கிடைக்கும். அவற்றின்மூலம் அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவார்கள். அதனால் உள்நாட்டில் சந்தையில் தேவைகள் அதிகமாகும். தேவைகள் அதிகமாவதால் உற்பத்தி பெருகும். இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் மேலும் பெருகும். மக்களிடம் பணம் தாராளமாகப் புழங்கும். இது பொருளாதாரத்திற்கு ஓர் உந்துசக்தியைத் தந்திடும்.
ஆனால், இவ்வாறு செய்வதற்குப் பதிலாக, நீங்கள் நிதிநெருக்கடி மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருந்தீர்களேயானால், அதன் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு அதிக சலுகைகளை அளிப்பீர்களேயானால், அது நாட்டிற்குப் பயன்படாது. வருவாயைப் பெருக்கிட எவ்வித நடவடிக்கையும் இல்லை. முந்தைய நிதியமைச்சர் இந்த அவையில் கூறியபதில் ஒன்றில் 5.10 லட்சம் கோடிரூபாய்க்கும் மேலான வரி வசூலிக்கப்பட வில்லை என்றார். நிதி நெருக்கடி எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு இதுவும் இருக்கிறது. இந்த வரி பாக்கியை வசூலித் திருந்தார்களானால், நிதி நெருக்கடி வந்திருக்காது. ஆனால் அதனைச் செய்யாது நிதி நெருக்கடியைக் காரணம் சொல்லி மானியங்களை வெட்டுகிறார்கள், அனைத்துச் செலவினங் களையும் வெட்டுகிறார்கள். இவ்வாறு வசூலிக்காத வரி பாக்கியில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை குறித்து எவ்வித பிரச்சனையும் கிடையாது. ஆயினும் அரசின் சார்பில் வசூலிக்கத் தயங்குகிறார்கள். வரி பயங்கரவாதம்பிரதமரும் நிதி அமைச்சரும் வரி பயங்கரவாதம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனந்த் சர்மா கூட வரி பயங்கரவாதம் குறித்து குறிப்பிடு கிறார்.
வரி பயங்கரவாதம் என்பதற்கான வரையறை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதன் பொருள் என்ன? இவர்களின் கருத்தை முற்றிலுமாக நான் எதிர்க்கிறேன். நம் நாட்டில் மொத்த வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி (கூயஒ-ழுனுஞ சயவiடி) விகிதாச்சாரம் கிட்டத்தட்ட 10 சதவீதம் மட்டுமே.இங்கிலாந்தில் இது 26.9 சதவீதம். நார் வேயில் இது 27.3 சதவீதம். டென்மார்க்கில் 34.1 சதவீதம். பெல்ஜியத்தில் 25.7 சதவீதம். ஒரு சதவீதத்தை நாம் உயர்த்தினோம் என்றாலும் நமக்கு கஜானாவிற்கு 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் வரும். நாம் நம்முடைய வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதாச்சாரத்தை இங்கிலாந்துக்கு இணையாக மாற்றியமைத்தோமானால் நம் கஜானா விற்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்கூடுதலாக வரி வருவாய் கிட்டும். நார்வேக்கு இணையாக மாற்றியமைத் தோமானால் கூடுதலாக 30 லட்சம் கோடிரூபாய் கிடைக்கும். இது வரி பயங்கர வாதமா?
பட்ஜெட் ஆவணங்களில் காணப் படும் மற்றோர் உண்மை. வரி தொடர்பாக ரிடர்ன்ஸ்( tax returns)தாக்கல் செய்துள்ள 6 லட்சத்து 18 ஆயிரத்து 806 கம்பெனிகளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 069 கம்பெனிகள் ஒரு காசு கூட வரியாக செலுத்தவில்லை. இணையதளம் மூலம் அமேசான் அல்லது ஃபிலிப்கார்ட் நிறுவனங்கள் உங்களுக்கு ஏதேனும் வரி செலுத்துகின்றனவா? சொத்துவரியை எடுத்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இது மொத்த வரி வருவாயில் 0.40 சதவீதம் மட்டுமே. பிரிக்ஸ் நாடுகளின் சராசரி 4.85 சதவீதம். ஜி-20 நாடுகளின் சராசரி 7.6 சதவீதம். இது வரி பயங்கரவாதமா? உண்மையில் வரி பயங்கரவாதம் என்ற பெயரில் இவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவத்தான் இச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள்.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சராக இருந்தபோது கடந்தகாலத்திலிருந்து வரி வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார்.
அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றின. ஆனால் பின்னர் ப.சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சராக வந்தபோது பார்த்தசாரதி ஷோம் என்பவர் தலை மையில் ஒரு நபர் குழு ஒன்றை அமைத்துநாடாளுமன்றத்தின் இரு அவை களும் இயற்றிய சட்டத்தை ரத்து செய்துவிட்டார். கடந்தகாலத்திலிருந்து வரி வசூலிக்கும் சட்டத்தை இங்கிலாந்து பின்பற்றுகிறது. 2008ம் ஆண்டு கொண்டு வந்த இச்சட்டத்தை 1987ம் ஆண்டிலிருந்தே நடைமுறைப் படுத்துகிறது. அவர்கள் செய்யும்போது, நாம் ஏன் செய்யக்கூடாது? இப்போது இதை அருண்ஜெட்லியும் செய்யத் தயாரா யில்லை. பின்னர் எப்படி வரி பயங்கரவாதம் என்று கூறுகிறீர்கள். உண்மையில் இவ்வாறு நீங்கள் கூறுவதன்மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு மேலும் சலுகை களை வாரி வழங்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாகும். பட்ஜெட் ஆவணங்களின்படி கார்ப் பரேட்டுகளுக்கு 5 லட்சத்து 72 ஆயிரத்து 922 கோடி ரூபாய் ரத்து செய்திருக்கிறீர்கள். இது அரசின் நிதிப்பற்றாக்குறை தொகை யைவிட அதிகமாகும்.
இவ்வாறு இவர் களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் அளித்த வரிச்சலுகை என்பது 36.5 லட்சம் கோடி ரூபாய்களாகும். இவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள போதிலும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அவர்களது பங்களிப்பு என்பது கடந்த 20 ஆண்டுகளில் 5 சதவீதம்தான் கூடியிருக்கிறது அல்லது 15 சதவீதம்தான். 1991க்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அனைத்து அரசாங்கங்களும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவான ஒன்று.
பட்ஜெட் மீதான விவாதத்தில்பங்கேற்று ஆற்றிய உரையிலிருந்து.

No comments:

Post a Comment