பெரியார் : வரவேற்பெல்லாம் பலமாத்தான் இருக்கு. நாங்க ரெண்டு பேரும் சில கேள்விகளைக் கேக்கலாம்னு வந்திருக்கோம்.
கலைஞர் : கேள்வியெல்லாம் எதுக்கு? இத்தனை நாள் கழிச்சு வந்திருக்கீங்க. அறிவாலயத்திலே தங்கி ஓய்வெடுத்துட்டுப் போகலாமே?
அண்ணா : எங்களுக்கு எதுக்கு தம்பி ஓய்வு? நாங்க கேக்க நினைக்கிற கேள்வி இதுதான். இப்ப நடக்கற தேர்தல் நாடாளுமன்றத்திற்கு நடக்கிற தேர்தல். ஆனா நீங்களும் ஸ்டாலினும் இது ஏதோ சட்டமன்றத் தேர்தல் மாதிரி அந்தம்மாவைத் திட்டியே பிரச்சாரம் பண்ணிக்கிட்டி ருக்கீங்க. ஏன், காங்கிரஸ், பாஜகவைப் பத்திச் சொல்றதுக்கு உங்ககிட்ட ஒரு விஷயமும் இல்லியா?
கலைஞர் : காங்கிரஸ் என்னு டைய குடும்பத்திற்குச் செய்த துரோகங்களைப் பட்டியல்போட்டு சொல்லியிருக்கேனே? மதச்சார்பற்ற நிலைக்குக் காங்கிரஸ் திரும்பி வந்தால் அவங்களை மன்னித்து ஆதரவு தரத் தயார்னும் கூறியிருக்கிறேனே?
அண்ணா : உன்னுடைய குடும் பத்திற்குச் செய்த கெடுதல்களை விடுவதுதான் மதச்சார்பற்ற நிலையா? நீ என்ன சொல்றேன்னே வரவரப் புரிய மாட்டேங்குது தம்பி! நான் கட்சியை ஒரு குடும்பம் என்றேன். நீ உன் குடும்பத்தையே கட்சியாக்கிவிட்டாய். என் வாழ்நாளெல்லாம் காங்கிரஸ் எதிர்ப்புக் கொடியைத் தூக்கிப் பிடித்தேன். அதை நான் போன உடனேயே நீ கீழே போட்டுவிட்டாய்! மாநில சுயாட்சி கோஷத்தையே வாய்ப் பந்தல் முழக்கமாக்கி விட்டாய். இதையெல்லாம் விட முக்கியமானது, நமது உயிர்க் கொள்கையான இடஒதுக் கீட்டினையும் சனாதன எதிர்ப்பினை யும் கீழே போட்டு விட்டு, அந்த சங்பரிவாரக் கூட்டத்தோடு போய்ச் சேர்ந்தாய். தற்போதும் இனி சேரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்ல மறுக்கிறாய்...
கலைஞர் (இடையில் குறுக்கிட்டு): திமுகஇருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்ற என் விளக் கத்தை நீங்கள் படிக்கவில்லையா, அண்ணா?
பெரியார் : வெங் காயம்! இந்த மாதிரியான பூச்சு வேலையெல்லாம் செய்து உன் உடன் பிறப்புக்களை வேண்டு மானால் நீ ஏமாத்தலாம். அண்ணாவுக்குப் பிறகு எமது கொள்கைகளை அமல்படுத்தும் இடத்தில் நீ இருப்பதாக எண்ணி ஒரு காலத்தில் பெருமைப்பட்டேன். சாதி மறுப்பு போச்சு. மதவாத எதிர்ப்பு போச்சு.. இப்படி நான் எதற்கெல்லாம் பாடுபட்டேனோ அதெல்லாம் போச்சு! நாங்க நொந்து நூலாகிப் போனோம். வரோம் தம்பி, உங்க ராஜ்ஜியத்தை நடத்துங்க!
(அடுத்து யாரைச் சந்திக்கலாம் என இருவரும் விவாதிக்கின்றனர்).
அண்ணா : கட்சியின் பெயரிலேயே என் பெயரை வைத்திருக்கும் கட்சித் தலைவியைச் சந்திக்கலாமா, தந்தையே?
பெரியார் : இப்படி வெள்ளந்தியா இருக்கியே அண்ணாதுரை! அந்தம்மாகிட்ட நமக்கு அப்பாயிண்ட் மெண்ட்டே கிடைக்காது. அப் படியே கிடைத்தாலும் நாம சொல்றதைக் காது கொடுத்துக் கேக்கக் கூட அவங்க தயாரா இருக்கமாட்டாங்க. அதுக்கு பதிலா, அந்த சனாதனக் கட்சியோட கூட்டணி வச்சிருக்காங்களே அந்த மூணு பேரையும் பார்ப்போம்.
(வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் மூவரும் அமர்ந்து தேர்தல் களத்தில் செய்ய வேண்டிய பிரச்சாரம் பற்றி உரையாடிக் கொண்டிருக்கின்றனர். பெரியாரும் அண்ணாவும் உள்ளே நுழைகின்றனர்).
வைகோ : வாங்க, வாங்க! என்ன திடீர்னு வந்திருக்கீங்க? கலிங்கப்பட்டி போகலாமா? அருமையான விருந்து வைக்கிறேன்.
அண்ணா : விருந்தெல்லாம் வேண்டாம் தம்பி! சில கேள்விகளைக் கேட்கவே வந்திருக்கோம். சேதுசமுத்திரத்திட்டத்தையும் இடஒதுக்கீட்டையும் எதிர்க்கிற பாஜகவோடு கூட்டணி வைக்க உனக்கு எப்படி மனம் வந்தது தம்பி?
விஜயகாந்த் : தமிழ்நாட்டிலே ஊழலை ஒழிக்க நான் இருக்கேன். நாட்டிலே ஊழலை ஒழிக்க ஒருவர் வேண்டாமா? அவர்தான் நரேந்திர மோடி. அவர் பிரதமராக வந்தால் நதிகளை இணைப்பார். காவிரிப் பிரச்சனை தீரும். மின் வெட்டுப் பிரச்சனை தீரும்... இந்தியா வல்லரசாகும்... இப்படி மனம் போனபடி சொல்லிக்கிட்டே போகலாம்.
பெரியார் : சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசிக்கிட்டிருக்காரே, யாரு இவரு?
வைகோ : இவர்தான் கருப்பு எம்.ஜி.ஆர். கேப்டன் விஜயகாந்த். இவரும் ஒரு திராவிடக் கட்சி வச்சிருக்காரு.
பெரியார் (வைகோவைப் பார்த்து ) : ராமருக்குக் கோவில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்னெல்லாம் சொல்றவங்களோட கூட்டணி வச்சிருக்கீங்க. மோடி சொல்றதைச் செய்தே காட்டுவார்ங்கறீங்க. அப்ப ஆபத்து இல்லியா? சிறுபான்மை மதத்தினரைப் பாதுகாக்கற கடமை நமக்கு இல்லியா தம்பி?
ராமதாஸ் : நம்ம நாட்டிலே நாடகக் காதலை ஒழிக்கணும்னா அதுமோடியாலதான் முடியும். நாடு பூராவும் மதுவிலக்கு அமலாகணும்னா மோடி பிரதமர் ஆகணும்.
வைகோ : தனி ஈழம் மலரணும்னா மோடி பிரதமர் ஆகணும். கச்சத் தீவை மீட்கணும்னாலும் சரி, ராஜபக்சேயை தூக்கிலே போடணும்னாலும் சரி மோடி பிரதமர் ஆனாத்தான் முடியும்.
விஜயகாந்த் : மீனவர் பிரச்சனை தீரணும்னா மோடி பிரதமர் ஆகணும்.
பெரியார் (அண்ணாவைப் பார்த்து ) : இப்படி இவங்க பாட்டுக்குக் கற்பனையா பேசிக்கிட்டே போறாங்களே? இதெல்லாம் மோடிக்குத் தெரியுமா? கடவுள் நம்பிக்கை இருந்தா தமிழ்நாட்டை ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். நமக்கு அந்த நம்பிக்கை இல்லாததினாலே அப்படிச் சொல் லித் தப்பிக்கவும் முடியாது...
அண்ணா : கவலைப்படாதீங் கப்பா! கம்யூனிஸ்டுகள் இருக்காங்க. நாம அன்று சொன்னதையெல்லாம் இன்னிக்கும் மறக்காம இருக்கறது அவங்க மட்டும்தான். அந்தக் கொள்கைகளைக் கைவிடாமல் இருப்பதும் அவர்கள்தான். மக்கள் இந்தத் தடவை நிச்சயம் அவங்களுக்கு ஓட்டுப் போடுவாங்க. தமிழகத்தின் எதிர்காலம் இனிமே அவங்க கையிலேதான். (இருவரும் மறைகின்றனர்)
- கற்பனை : ராஜகுரு
No comments:
Post a Comment