Wednesday, April 16, 2014

தேர்தல் : தனிநபர் போட்டி அல்ல!
தொலைக்காட்சியில் ஏ.கே.பத்மநாபன் வேண்டுகோள்


உழைக்கும் மக்களின் நலன் காத்திட, நடைபெறவிருக்கும் மக்களவைக்கானத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சிக்கும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் வாக்களிக்குமாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினரும், சிஐடியு-வின் அகில இந்தியத் தலை வருமான ஏ.கே.. பத்மநாபன் கூறினார். அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சி களுக்கு தூர்தர்ஷனில் தேர்தல் பிரச்சாரம் செய்திட வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திங்கள் அன்று காலை தூர்தர்ஷன் தேசிய தொலைக்காட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.கே.பத்மநாபன் ஆற்றிய உரை வருமாறு:
``அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே. 16வது மக்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தல் நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் ஆழமான நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில் நடைபெறுகிறது. நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாகவே இந்த நெருக்கடி விளைந்துள்ளது. இக்கொள்கைகளின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது நாட்டில் உள்ள உழைப்பாளி மக்களேயாகும். அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட தொழி லாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள் மட்டுமல்ல கிராமப்புறங்களில் உள்ளகோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர் களும் இக்கொள்கைகளினால் பாதிக்கப் பட்டவர்களேயாவார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்முறை சார்ந்த அறிஞர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
இத்தகைய சூழ்நிலையில் ஆட்சி யாளர்களின் கொள்கைகள் குறித்து ஓர் ஆழமான விவாதத்தை நடத்துவதற்கும், அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை முன்வைப்பதற்கும் பொதுத் தேர்தல்கள் ஒரு வாய்ப்பாக அமைகின்றன. துரதிர்ஷ்டவசமாக, கொள்கைப் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் ஒட்டுமொத்தமாக ஏதோ இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான போட்டி என்பதுபோல சித்தரிக்கப்படு கின்றன.கடந்த ஐந்தாண்டுகள் என்பது தொழிலாளர்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப் பட்ட காலமாகும். தொழிலாளர்கள் இதற்கு முன் தங்கள் போராட்டங்கள் மூலமாக பெற்றசலுகைகள் கூட இந்தக்காலத்தில் மறு தலிக்கப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து ஏறிவருவதானது இவர்களின் துன்ப துயரங் களை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் பின்னணியில், நிரந்தரத் தொழிலாளர்களின் பணியிடங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், கேசுவல் தொழிலாளர்கள் மூலமாகவும் மற்றும் பயிற்சியாளர்கள், அப்ரண்டிசுகள் என்ற பெயரிலும் அரசாங்கமும் முதலாளி களும் பெரிய அளவில் தொழிலாளர்களின் ஊதியங்களை வெட்டிக் குறைத்து லாபம்ஈட்டி வருகின்றன. மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில், மத்திய அரசாங்கமே ஒரு கோடி ஊழியர்களை, பிரதானமாக பெண் களை, அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு அமைப்பாளர்கள் முதலான பணிகளில் அமர்த்தி இருக்கிறது. இவர்களை சமூக ஊழியர்கள் என்றும் தொண்டர்கள் என்றும் முத்திரை குத்தி இருக்கிறதேயொழிய, இவர்களை தொழிலாளர்களாக மத்திய அரசு கருதவில்லை.
இவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கும், நான்காயிரம் ரூபாய்க்கும் இடையே மதிப்பூதியம் என்ற பெயரில் அற்ப ஊதியம் வழங்கி வருகிறது.நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கழிந்தபின்னரும் நம் நாடு ஓர் ஊதியக் கொள்கையை இதுவரை உருவாக்கிட வில்லை. தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக 1957ல் நடைபெற்ற 15வது இந்தியன் தொழிலாளர் மாநாடு, நான் மீண்டும் வலியுறுத்திக்கூறுகிறேன், 1957ம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு, ஒரு மனதாக நிறைவேற்றிய பரிந்துரைகள், இதுவரை அமல்படுத்தப்படவே இல்லை. இப்பரிந்துரைகளை 2012ல் நடைபெற்ற 44வது இந்தியன் தொழிலாளர் மாநாடும் மீண்டும் ஒருமனதாக வலியுறுத்தியிருக்கின்ற போதி லும் பயனேதுமில்லை. நாட்டிலுள்ள தொழிற் சங்கங்கள் அனைத்தும் இணைந்து ஒரே குரலில் குறைந்தபட்ச ஊதியம் 10 ஆயிரம் ரூபா யாக நிர்ணயம் செய்து உடனடியாக வழங் கிட வேண்டும் என்றும் அதன்பிறகு ஒவ் வொருவருக்கும் 1957ல் தீர்மானங்களின் அடிப்படையில் ஊதியங்கள் நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை உட்பட அனைத்துத் தொழிலாளர் நலச் சட்டங்களும் வெறும் தாள்களில் மட்டுமே காணப்படுகின்றன. சட்டத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள ஆண் - பெண் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி அதிகாரக்குழுமம் (ஞகுசுனுஹ) எனப்படும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, நாட்டிலுள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதி யப் பயன்களை அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டது. மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ஊழியர் வைப்பு நிதித் திட்டத் தின்கீழ் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்கிற அரசின் முடிவும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில், தொழிலார் நலன் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் இடம் பெறவேயில்லை.நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்கம் இத்தாக்குதல்கள், விதிமீறல்கள் மற்றும் சுரண்டல்களைத் தங்கள் வீரஞ்செறிந்த போராட்டங்களின் மூலமாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் இயங்கும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் மற்றும் சுயேச்சையாக இயங்கும் பல்வேறு தேசிய சம்மேளனங்களும் இணைந்து, பத்து அம்சக் கோரிக்கைகளை உருவாக்கி, போராடி வருகின்றனர்.
இக்கோரிக்கைளில் சாமானிய மக்களின் அடிப்படைப் பிரச்ச னைகளான விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துதல், அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்துதல் மற் றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளானவைகளும் அடங்கும். இவற்றை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 2013 பிப்ரவரியில் 48 மணி நேரம் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு வேலைநிறுத்தங்களை மேற்கொண்டுள்ளன. சாமானிய மக்களின் நலன்களைக் காப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசு சாமானிய மக்களின் கோரிக்கைகள் குறித்து இதுவரை எவ்வித விவாதமும் நடத்திடவில்லை. இதுதொடர்பாக அரசு சார்பில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டபோதிலும் நடைமுறையில் எதுவும் நடைபெறவில்லை. உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளைப் பொறுத்தவரை, தற்போதைய ஐ.மு.கூட்டணி அரசாங்கத்திற்கும், முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கும் இடையே எந்த வித்தி யாசமும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட கார்ப்பரேட்டுகளின் நலன்கள்தான் முக்கியமாகும்.
இவ்விரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஒன்றையொன்றை விமர்சித்துக்கொண்டாலும், நடைமுறையில் இவ்விரு கட்சிகளுமே ஒரேவிதமான நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக் கின்றன. இதற்கு மாற்றாக, நாட்டிலுள்ள ஆண்-பெண் அனைத்து உழைக்கும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்திட, ஒரு மாற்றுக்கொள்கைத் திசைவழி இன்றைய அத்தி யாவசியத் தேவையாகும். இத்தகைய மாற்றுக் கொள்கையை நாட்டிலுள்ள இடதுசாரிக் கட்சிகள்தான் முன்வைத்திருக்கின்றன. இதர இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து இந்தத் திசைவழியில் முன்னேறிடுவோம் என்று நாட்டு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கை மூலம் உறுதி அளித்திருக்கிறது. அமையவிருக்கும் மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சிகள் வலுவான முறையில் பங்கேற்பது தான் நாட்டின் நலன்களையும், நாட்டிலுள்ள உழைக்கும் மக்களின் நலன்களையும் பாது காத்திடக்கூடிய வகையில் ஒரு மாற்றுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதை உத்தரவாதப்படுத்திடும். எனவே, வாக்காளப் பெருமக்கள் அனை வரும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் வாக்களித்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.. இவ்வாறு ஏ.கே. பத்மநாபன் உரையாற்றினார். (ந.நி.)

No comments:

Post a Comment